விஜய் சேதுபதியின் பள்ளி படிக்கும் மகளுக்கு பாலியல் மிரட்டல்! கொடூர மனநிலை கொண்ட ஆசாமியால் எகிறும் கண்டனங்கள்!
விஜய் சேதுபதி மகளுக்கு, ட்விட்டர் பக்கத்தில் மர்ம ஆசாமி ஒருவர் காது கூசும் கேவலமான வார்த்தைகளை பதிவிட்டு, பாலியல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் விஜய் சேதுபதி ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில், ஹீரோவாக மட்டும் இல்லாமல், எந்த விதமான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்க்கு ஏக பொருத்தமாக இருக்கும் நடிகர் என்கிற நம்பிக்கையை ரசிகர்கள் மனதில் விதைத்துள்ளவர் விஜய் சேதுபதி.
இவர் இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் 800 என்ற படத்தில் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, அச்சு அசல், விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாகவே மாறி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
முத்தையா முரளிதரன் சிங்கள அரசின் கைக்கூலி என்றும் எனவே அவரது வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது எனவும் தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் எழுந்தன.
இதையடுத்து விஜய் சேதுபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்றால் அவர் 800 படத்திலிருந்து விலகி கொள்ளட்டும் என்றும் முத்தையா முரளிதரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தாப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன் எனவே என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை. அது மட்டுமல்லாது விஜய் சேதுபதி அவர்களின் கலை பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் எற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு திரைப்படத்தில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
முத்தையா முரளிதரனின் அறிக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் சேதுபதி நன்றி, வணக்கம் என பதிவிட்டுள்ளார். இதனால் முத்தையா முரளிதரன் திரைப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், மர்ம ஆசாமி ஒருவர், போலி ட்விட்டர் பதிவில் இருந்து... மிகவும் கேவலமான வார்த்தைகளால் விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை தொடர்ந்து அந்த நபரை கைது செய்ய வேண்டும் என, ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே ஐ.பி.எல் விளையாட்டில் தோனி சரியான விளையாடவில்லை என்பதற்காக, அவரது மகள் ஜிவாவிற்கு, 16 வயது சிறுவன் பாலியல் மிரட்டல் விடுத்தது, பின்னர் ஜார்கண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.