16 நாட்களில் ஓடிடி தளத்தை அதிரவைத்த மாஸ்டர்..! இத்தனை மில்லியன் பேர் பார்த்துள்ளார்களா?
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் இதுவரை பல மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ள தகவல், விஜய் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
“மாஸ்டர்” திரைப்படத்தால் கொரோனா அச்சத்தையும் தாண்டி மக்கள் தியேட்டர்களுக்கு வந்ததாக விஜய்யை புகழ்ந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கூட இந்த செய்தியைக் கேட்டு போர்க்கொடி தூக்கினர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு , ஸ்ரீமன், சஞ்சீவ் கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதன் பின்னர் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் 50 சதவீத ஆக்குபன்ஸியிலும் மாஸ்டர் திரைப்படம் அபார சாதனை படைத்தது.
இறுதியாக வெளியான தகவல்களின் படி “மாஸ்டர்” திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே 110 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்த வசூல் 200 கோடியை தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தியேட்டர்களில் வெற்றிகரமாக மாஸ்டர் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
“மாஸ்டர்” திரைப்படத்தால் கொரோனா அச்சத்தையும் தாண்டி மக்கள் தியேட்டர்களுக்கு வந்ததாக விஜய்யை புகழ்ந்த விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கூட இந்த செய்தியைக் கேட்டு போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் மாஸ்டர் படத்தின் 3வது வார வசூலை விநியோகஸ்தர்களுக்கு விட்டுக்கொடுப்பது என சுமூக முடிவு எட்டியது.
'மாஸ்டர்' திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியாகி, 16 நாட்களே ஆகும் நிலையில், இதுவரை 9.2 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் படத்தை பார்த்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மட்டும் 28 மில்லியன் பார்வையாளர்கள் உலகம் முழுவதும் மாஸ்டர் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து அதிரவைத்துள்ளார். இது 'மாஸ்டர்' படைத்த புதிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.