கோவாவில் மாமியார் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய விக்கி... அம்மா கைபிடித்து கேக் வெட்டிய நயன்தாரா...!
கோவா சென்றுள்ள விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி அங்கு நயனின் அம்மாவிற்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
5 வருடத்திற்கு முன்பு நானும் ரெளடி தான் படம் மூலம் இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பற்றிய காதல், இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.
படப்பிடிப்பு டூ பாரின் டூர் வரை இருவரும் எங்கு சென்றாலும் கையை கோர்த்துக்கொண்டு ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள். காதலிப்பது எல்லாம் சரி எப்போ கல்யாணம் என ரசிகர்கள் கேட்டால் மட்டும் புரியாத மாதிரி ஒரு பதிலை சொல்லி நழுவி ஓடுகிறார்கள்.
கொரோனா லாக்டவுனால் வீட்டிற்குள் அடைந்து கிடந்த நயனும், விக்கியும் சமீபத்தில் ஓணம் கொண்டாட்டத்திற்காக தனி விமானம் மூலம் கொச்சி சென்ற போட்டோஸ் வெளியானது.
அங்கு மாமியார் வீட்டில் தடபுடலாக ஓணம் கொண்டாடிய விக்னேஷ் சிவன், அந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர, அவை தாறுமாறு வைரலாகின.
கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சினிமா படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. இதனால் கிடைத்த இந்த கொஞ்ச நாட்களை குதூகலமாக செலவிடலாம் என முடிவு செய்த காதல் ஜோடி தற்போது கோவாவில் முகாமிட்டுள்ளது.
கோவாவில் அவர்கள் தங்கியுள்ள ஓட்டலில் இருக்கும் கார்டனில் நயன்தாரா உலவும் புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தார்.
வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலித்த நயன்தாராவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
இந்நிலையில் கோவாவிற்கு நயன்தாரா - விக்னேஷ் சிவன் புறப்பட்டு சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது. அதற்கான போட்டோவையும் அவரே வெளியிட்டுள்ளார்.
கோவாவில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அந்த போட்டோவை பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன் வருங்கால மாமியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அசத்தியுள்ளார்.
அம்மாவின் கையை பிடித்து செம்ம மகிழ்ச்சியுடன் கேக் கட் பண்ணும் நயன்தாராவின் போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோவாவிற்கு விக்னேஷ் சிவனின் அம்மாவும் சென்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.