எலிசபெத் ஹெலன் பொம்பளையா...சாக கிடந்தேன்... மனைவி பற்றி அதிர்ச்சி தகவலை வெளியிட்டு அழுத பீட்டர் பால்!
வனிதாவின் 3 ஆவது திருமணம் குறித்த சர்ச்சை இன்று வரை ஓய்ந்தபாடு இல்லை. ஒவ்வொரு நாளும், இதுகுறித்து அடுக்கடுக்கான புதிய தகவல்கள் வலம் வரும் நிலையில், தற்போது முதல் முறையாக பீட்டர் பால் தன்னுடைய மனைவி எலிசபெத் ஹெலன் கூறி வரும் புகார்களுக்கு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பிரபல ஊடகம் ஒன்றிற்காக, வனிதாவே தன்னுடைய 3 ஆவது கணவர் பீட்டர் பாலிடம் பேட்டி எடுத்துள்ளார். இதில் மனைவி எலிசபெத் ஹெலன் கூறிய புகார்களுக்கு அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார் பீட்டர் பால்.
இந்த பேட்டியில்... தன்னுடைய பூர்வீகம் காரைக்குடி என்றும், தன்னுடைய நான்கு வயதிலேயே அப்பா இறந்து விட அம்மா தான் அக்கா, தங்கை நான் உட்பட அனைவரையும் தனியாக நின்று வளர்த்தார். திரை துறை மீது ஆர்வம் இருந்ததால், நானே சென்னைக்கு வந்து பிரசாத் ஸ்டுடியோவில் வேலைக்கு சேர்ந்தேன். பின் மெல்ல மெல்ல திறமைகளை வளர்த்து கொண்டு, ஹாலிவுட், பாலிவுட் திரையுலகில் கூட பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார்.
மனைவி எலிசபெத் ஹெலன் உடனான திருமணம் குறித்து பேசுகையில், அவர் தன்னுடைய உறவினர் ஒருவரின் பெண் . தங்களுக்கு பெற்றோர் பார்த்து வைத்து தான் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவரை தான் நான் அதிகம் காதலித்தேன் என்பதையும் கூறியுள்ளார் பீட்டர் பால்.
ஆனால், ஒரு சில விஷயங்களில் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் எலிசபெத் ஹெலன் தான் தன்னை தனியாக விட்டு விட்டு அம்மா வீட்டுக்கு சென்று விடுவார். கடைசியாக அவரை கடந்த 2013 ஆம் ஆண்டு தான் பார்த்தேன். அதன் பின்னர் இருவருக்குள்ளும் எந்த தொடர்பும் இல்லாமல் போய் விட்டது என்பதையும் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை எலிசபெத் ஹெலன் பொம்பளை பொருக்கி என்பதை சொல்லும் போது தனக்கே சிரிப்பாக உள்ளது. பணி நிமித்தமாக, இரவு நேரங்களில் வரும் போன் கால்களை வைத்து அவர் அப்படி பேசுகிறார். இதனை பல முறை அவரிடம் எடுத்து கூறியும் அவர் அதனை ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் கூறியுள்ளார்.
அதே போல், தன்னை குடிகாரர் என்று மனைவி கூறுவதை ஏற்று கொள்வது போல் பேசிய பீட்டர் பால், மனைவி தன்னை புரிந்துக்கொள்வில்லை என்கிற சோகத்தில் தான், ட்ரிங்க் செய்ய துவங்கினேன். ஆனால் அது போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கும் படியெல்லாம் செல்லவில்லை என்றும், உண்மையில் தனக்கு ட்ரிங்க் பண்ணுவது சுத்தமாக பிடிக்காது, அதை மீறி நான் இப்படி செய்திருந்தால் எந்த அளவிற்கு என் மனம் புண் பட்டிருக்கும் என தன்னுடைய வேதனையை பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய உடலில் உள்ள காயங்கள் பற்றி அவர் பேசுகையில், ஒரு நிலையில் நான் மனம் வெறுத்து தன்னுடைய, அம்மா வீட்டில் இருந்தபோது 3 ஆவது மாடியில் இருந்து கீழே குறித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன். ஒரு சுவற்றில் தன்னுடைய உடல் விழுந்ததில், கிட்ட தட்ட 25 இடங்களில் தையல் போடப்பட்டது. எலும்பு முறிவும் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் மரணத்தின் விளிம்பில் நான் இருந்த போது கூட தன்னுடைய மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை வந்து பார்கவில்லை. மனைவியா கூட வரவேண்டாம், இப்படி அடிபட்டது என தெரிந்தால் பக்கத்துக்கு வீட்டில் உள்ளவர்கள் கூட வந்து பார்ப்பார்கள். அப்படி கூட அவர் வரவில்லை அவர் எல்லாம் ஒரு பொம்பளையா என கண்ணீரோடு முதல் முறையாக இந்த பேட்டியில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார் பீட்டர் பால்.