ஓவராய் சவுண்ட் விட்டு வனிதாவிடம் சரண்டரான நாஞ்சில் விஜயன்... போனில் கண்ணீர் விடாத குறையாக கதறல்...!
வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரத்தில் சம்பந்தமே இல்லாமல் நுழைந்து வாங்கிக் கட்டிக்கொண்ட நாஞ்சில் விஜயன். தற்போது வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு சமாதானமாகியுள்ளார்.
வனிதா - பீட்டர் பால் 3வது திருமண விவகாரம் பலருக்கும் பேசு பொருளாக மாறிவிட்டது. அதிலும் சம்பந்தமே இல்லாத பலரும் கருத்து கூற ஆரம்பித்தது வனிதாவை கடுப்பேற்றியது.
கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி மற்றும் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் வனிதா பற்றி விமர்சித்ததால் வனிதா அவர்கள் மீது போலீசில் புகார் கொடுத்தார்.
அதுமட்டுனின்றி ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் என சோசியல் மீடியாவிலும் அவர்களை நாறுநாறாக கிழித்தெடுத்தார்.
இந்த பிரச்சனையில் சம்மனே இல்லாமல் ஆஜரான நாஞ்சில் விஜயன் வனிதா அக்கா ப்ளீஸ் என்னை விட்டுடுங்க என கண்ணீர் விட்டு கதறும் அளவிற்கு செய்தார்.
முதலில் பூனை போல் சாந்தமாக இருந்த நாஞ்சில் விஜயன் இடையில் புலியாக மாறி வனிதா பற்றிய சில விஷயங்களை சோசியல் மீடியாவில் கசியவிட்டார்.
ஆனால் சூர்யா தேவி கைதுக்கு பிறகு அடக்கி வாசிக்க ஆரம்பித்த நாஞ்சில் விஜயன், வனிதாவிற்கு போன் செய்து கண்ணீர் விட்டு கதறாத கொடுமையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுகுறித்து வனிதா தனது ட்விட்டரில், நாஞ்சில் விஜயன் என்னை அழைத்திருந்தார். முதலில் இருந்து நடந்த அனைத்தைப் பற்றியும் அவர் கூறினார். அவரை நான் சந்தித்தது கூட இல்லை என்பதால் எங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது, அதனால் எங்களுக்கு நடுவில் எந்த பிரச்சனையும் இல்லை. இத்தனை குழப்பத்திற்கு சூர்யா தேவி தான் காரணம் என பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கஸ்தூரி, அவரை தேவையில்லாமல் பிரச்சனையில் கொண்டு வந்துவிட்டார். அவருடைய சேனலில் வேண்டுமென்றே பேசவைத்துள்ளார் என கஸ்தூரி மீது குற்றச்சாட்டியுள்ளார்.
நடுவில் இருக்கும் சிலரால் நாஞ்சில் விஜயன் திசை திருப்பப்பட்டதாக கூறும் வனிதா, அவரது மன்னிப்பை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஏனென்றால் அவர் தேவையில்லாமல் இந்த சர்ச்சையில் இருக்க விரும்பவில்லை. அவர் ஒரு இளம் டேலண்ட். அவரது வளர்ச்சியை அது பாதிக்கும். அவர் எந்த தவறும் செய்யாத நிலையில் அவரை பற்றி குறை கூறுயதற்காக நான் வருத்தப்படுகிறேன் என பெரிய மனதுடன் பதிவிட்டுள்ளார்.