திருமணமான ஒரே நாளில் வனிதா வாழ்க்கையில் வெடித்த பிரச்சனை! பீட்டர் பால் மனைவி பரபரப்பு புகார்..!
பழம்பெரும் நட்சத்திர தம்பை விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள் வனிதா நேற்று, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு நாள் மட்டுமே ஆகும் நிலையில், பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் என்பவரை தன்னுடைய கணவரை மீட்டுத்தருமாறு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
ஏற்கனவே இரண்டு திருமணம் மற்றும் ஒரு காதல் தோல்வியை சந்தித்த வனிதா, தன்னுடைய பெற்றோர், மற்றும் சகோதர சகோதரிகளுடன், ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு சரியான ரீ-எண்ட்ரியாக அமைந்தது. மேலும் விஜய் டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமையல் திறமையை வெளிப்படுத்தி, டைட்டில் வின்னராகவும் மாறினார்.
இதைத்தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு வனிதாவிற்கு மூன்றாவது திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. சோசியல் மீடியாவில் திருமண பத்திரிகையும் வெளியாகி வைரலானது. ரசிகர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளித்த வனிதா, பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதை உறுதி செய்தார்.
தன்னுடைய அம்மா - அப்பாவின் திருமண நாளான ஜூன் 27 ஆம் தேதியே தன்னுடைய திருமணத்தை மிகவும் எளிமையாக நடத்த முடிவு செய்ததாகவும் கூறினார்.
இவர் அறிவித்தபடி, நேற்று வனிதா - பீட்டர் பால் திருமணம், வீட்டிலேயே மிக எளிமையான முறையில் நடந்தது. இதில் வனிதாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதே போல் பீட்டர் பாலின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வனிதா திருமணம் செய்து கொண்டுள்ள பீட்டர் பால், திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்கிற தகவல் வெளியான நிலையில், இவருடைய மனைவி எலிசபெத் ஹெலன் வடபழனி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இதில் இவருவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 7 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், மேலும் தன்னை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
வனிதாவுக்கு திருமணம் ஆகி ஒரு நாள் மட்டுமே ஆகும் நிலையில், அவருடைய வாழ்க்கையில், இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது ரசிகர்களையே அதிர்ச்சியடைய செய்துள்ளது.