- Home
- Cinema
- Udhayanidhi :எதையும் விடுறதா இல்ல... வரிசையாக பெரிய படங்களை தட்டித்தூக்கும் உதயநிதி- இப்போ என்ன படம் தெரியுமா?
Udhayanidhi :எதையும் விடுறதா இல்ல... வரிசையாக பெரிய படங்களை தட்டித்தூக்கும் உதயநிதி- இப்போ என்ன படம் தெரியுமா?
Udhayanidhi : விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், கமலின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி இருந்தது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்பட,ம் ராக்கெட்ரி : நம்பி விளைவு. இப்படத்தில் நம்பி நாராயணனாக நடித்திருக்கும் மாதவன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதோடு, தனது சொந்த செலவில் தயாரித்தும் உள்ளார். நடிகர் மாதவன் இயக்கியுள்ள முதல் திரைப்படம் இதுவாகும்.
இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த நம்பி நாராயணன், ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கடந்த 1994-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலையும் ஆனார். அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் மாதவன்.
இப்படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். ஏற்கனவே பார்த்தாலே பரவசம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துள்ள இவர்கள் தற்போது 3வது முறையாக இணைந்துள்ளனர். நடிகர் ஜெகன், இப்படத்தில் சயின்டிஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வருகிற ஜூலை 1-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 6 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. வருகிற மே 19-ந் தேதி பாரிஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், கமலின் விக்ரம், சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களின் வெளியீட்டு உரிமையையும் இந்நிறுவனம் கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Nayanthara : காதல் முறிவுக்கு பின் மீண்டும் நயனுடன் இணையும் பிரபுதேவா... ‘மறுபடியுமா’ என ஷாக் ஆன ரசிகர்கள்