சூர்யாவை முந்திய திரிஷா..! தரமான செயலுக்கு குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான கிரீன் இந்தியா சேலஞ்சில், நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன் பங்கேற்றார்.
தன்னுடைய மகனுடன் சேர்ந்து மரக்கன்று நட்ட பின், இந்த சேலஞ்சை திரிஷா உள்ளிட்ட 5 பிரபலங்கள் இதனை செய்து முடிக்குமாறு சவால் விட்டார்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, இவருடைய ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்தது.
இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், சூர்யா, நடிகைகள் ரக்ஷிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா ஆகியோருக்கு விடுத்தார் பிரகாஷ் ராஜ்.
மற்ற பிரபலங்கள் இதுவரை செய்திடாத நிலையில், ஏற்கனவே இந்த சேலஞ்சில் தன்னுடைய பெயரை கூறியதற்கு நன்றி என தெரிவித்த திரிஷா, முதல் ஆளாக சேலஞ்சை நிறைவேற்றியுள்ளார்.
தன்னுடைய வீட்டில் செடி நட்டு, அதன் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் திரிஷா பகிர்ந்துள்ளார். இதற்க்கு ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால் போன்ற பிரபலங்கள் இதனை செய்வார்களா என்கிற எதிர்பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அனைவரையும் முந்தி இந்த சவாலை நிறைவேற்றி விட்டார் திரிஷா.
ஏற்கனவே தளபதி விஜய் சமீபத்தில், மகேஷ் பாபுவின் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தன்னுடைய வீட்டில் செடிகளை நட்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டார் அது இந்திய அளவில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.