MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!! திடீர் என வெளியேறிய பிரபலம்..!!

பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு..!! திடீர் என வெளியேறிய பிரபலம்..!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி (biggboss tamil 5) அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. இந்த முறை கடந்த 4 சீசனை போல் இல்லாமல், மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடிய நிலையில், திடீர் என தற்போது ஒரு போட்டியாளர் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
manimegalai a
Published : Oct 09 2021, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் மட்டுமே முதல் வாரம் எலிமினேஷன் நடந்தது. அதை தொடர்ந்து வெளியான சீசன்களில் 2 ஆவது வாரத்தில் இருந்தே எலிமினேஷன் பயணத்தை பிக்பாஸ் துவங்கி வைத்தார்.

 

25

இந்நிலையில் பிக்போஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் இதே தான் நடக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. காரணம், நாமினேஷன் படலம் நடக்கவில்லை. அதே போல் பிக்பாஸ் வீட்டில் ஒரு தலைவரை இந்த வாரம் தேர்வு செய்யாமல், ஒவ்வொரு அணிக்கும் ஒரு தலைவர் என நியமிக்கப்பட்டனர் என்பது நாம் அறிந்ததே.

 

35

முதல் வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு பெரிதாக எந்த ஒரு பிரச்னையும் நடக்கவில்லை. ஆனால் நேற்று மட்டும் தாமரை செல்வி பேசியதால் நமீதா கடுப்பாகி சில வார்த்தைகளை விட்டதில் அவர் கண்கலங்கி விட்டார். பின்னர் இந்த பிரச்னையும் முடிவுக்கு வந்து விட்டது. ஆனால் வரும் வாரங்களில் இதே போல் நிகழ்ச்சி செல்லாமல் பரபரப்பான சண்டைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

45

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், தகவலில் திடீர் என பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

 

55

அவர் வேறு யாரும் இல்லை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சண்டைக்கு வரிந்து கட்டிய திருநங்கை நமீதா மாரிமுத்து தான். இதனை உறுதி செய்வது போல் இன்றைய தினம் வெளியாகியுள்ள புரோமோவிலும் இவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved