16 வயதில் டிக் டாக்கில் பிரபலம்... 10 லட்சம் ஃபாலோவர்ஸ்... வெளியானது திடீர் தற்கொலைக்கான அதிர்ச்சி காரணம்..!
டிக் டாக் செயலி மூலம் பிரபலமான, சியா கக்கர் என்கிற 16 வயது சிறுமி, தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் செயலி மூலம் பலர் தொடர்ந்து பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில், குட்டி குட்டி டான்ஸ் போட்டு செம்ம பிரபலமானவர்.
டெல்லி சேர்ந்த இவர், டிக்டாக் மூலம் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை வைத்துள்ளார்.
siya kakkar
பள்ளி மாணவியான சியா கக்கர் ஒரு பக்கம் படிப்பில் கவனம் செலுத்தினாலும், டிக் டாக் செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
பள்ளி மாணவியாக இருந்தாலும் பார்ப்பதற்கு கல்லூரி மாணவிகளை போல் காட்சியளிப்பார்.
டிக் டாக் மட்டும் இன்றி, இன்ஸ்டாகிரம் பக்கத்திலும் இவருக்கு பல ஃபாலாவர்ஸ் உள்ளனர். இவர் போடும் ஒவ்வொரு புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு லைக்குகள் குவியும்.
இந்நிலையில் சியா கக்கர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் இவருடைய ரசிகர்கள் மற்றும் பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்நிலையில் இவர் தற்கொலை குறித்த அதிர்ச்சி காரணம் வெளியாகியுள்ளது.
சியாவை தொடர்பு கொண்ட சிலர், அவரை தொலைபேசியில் மிரட்டியதாகவும், இதனால் அவர் அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பார்ப்பதற்கு கல்லூரி மாணவி போல் தோற்றமளித்தாலும், இந்த பிரச்னையை எப்படி கையாளுவது என்பது தெரியாமல் சியா தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் சியாவின் செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றார். அதுமட்டுமின்றி சியாவின் நெருங்கிய நண்பர்களையும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்