முடிவுக்கு வந்த 'திட்டம் இரண்டு'... கடைசி நாளில் கேக் வெட்டி கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ்..!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்துள்ள திரில்லர் படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், 'காக்க முட்டை' படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, தான் நடிக்கும் படங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஹீரோக்களுக்கு ஜோடி போடும் படங்களை விட ஹீரோயின் கதையாசம் கொண்ட படங்களையே அதிகம் தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் இவர் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்த, 'கனா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இதுவரை அதிரடியான படத்தில் நடிக்காமல் இருந்த இவர், முதல் முறையாக அதிரடியான ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ள திரைப்படம் 'திட்டம் இரண்டு'.
விக்னேஷ் கார்த்திக் என்பவர் இயக்கம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கினை விஜய் சேதுபதி வெளியிட்டார்.
கொரோனா தளர்விற்கு பின், முழு வீச்சில் நடந்த இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிவடைந்துள்ளது.
கடைசி நாளில் இந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் படக்குழுவினருடன் கேக் வெட்டிய கலகலப்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.