MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 400 படங்களில் நடித்து, அனாதையான நடிகை ஜெயகுமாரி; பின்னணி என்ன?

400 படங்களில் நடித்து, அனாதையான நடிகை ஜெயகுமாரி; பின்னணி என்ன?

Actress Jayakumari : 1966ம் ஆண்டு தொடங்கி 1980ம் ஆண்டுகளின் துவக்கம் வரை டாப் நடிகையாக இருந்து இன்று வாழ்க்கையில் அடுத்த நாளை எப்படி கழிக்க போகிறோம் என்கின்ற கலக்கத்தோடு வாழ்ந்து வருகிறார் நடிகை ஜெயக்குமாரி.

2 Min read
Ansgar R
Published : Oct 19 2024, 08:04 PM IST| Updated : Oct 19 2024, 09:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Jayakumari

Jayakumari

1952ம் ஆண்டு பிறந்த நடிகை தான் ஜெயகுமாரி, இளம் வயதிலேயே சினிமா மீது கொண்ட ஆசையின் காரணமாக கலைத்துறையில் களமிறங்கினார். 1966 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் மெகா ஹிட் ஆன "நாடோடி" என்கின்ற திரைப்படம் மூலம் தான் ராஜகுமாரி தன்னுடைய கலை வாழ்க்கையை தொடங்கினார். தொடர்ச்சியாக தமிழில் "சக்கரம்", "சிஐடி சங்கர்", "எங்கிருந்தோ வந்தால்", "மன்னவன்", "மாணவன்" மற்றும் "ரிக்ஷாக்காரன்" போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அசத்தியவர் ராஜகுமாரி.

"சுள்ளான்கள் எல்லாம் அடுத்த MGRனு சொன்னா எப்படி? விஜயை மறைமுகமாக தாக்கினாரா ராஜேந்திர பாலாஜி?

24
Actress Jayakumari

Actress Jayakumari

1952ம் ஆண்டு பிறந்த ராஜகுமாரி, 1972 ஆம் ஆண்டுக்குள், அதாவது அவருடைய 20 வது வயதுக்குள் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் டாப் நடிகையாக மாறினார். பல ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் நடிகையாக 1970களிலேயே திகழ்ந்த வெகு சில நடிகைகளில் ஒருவராகவும் மாறினார் ராஜகுமாரி என்று சொல்லும் அளவிற்கு மிகப்பெரிய நடிகையாக அவர் உருவெடுத்தார்.

34
jayakumari life

jayakumari life

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என்று இந்திய மொழிகள் பலவற்றுள் 1970களில் இறுதியில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வந்த ஜெயக்குமாரி, சிங்கப்பூர் சென்றபோது, அங்கு இருந்த அப்துல்லா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகும் சினிமாவில் பெரிய நடிகையாக வலம்வந்த அவர், ஒரு கட்டத்தில் சினிமாவில் தயாரிப்பாளராக மாற முடிவு எடுத்தார். அவருடைய வாழ்க்கையில் அவர் எடுத்த மிக தவறான முடிவு அது என்றால் அது மிகையல்ல. பிரகாசம் என்பவருடைய இயக்கத்தில் ஒரு படத்தை எடுக்க அவர் முடிவு செய்தார். 

அதுவரை அவர் சம்பாதித்த அனைத்து பணமும் அந்த திரைப்படத்தில் போடப்பட்டது. ஒரு கட்டத்தில் அந்த படத்தை எடுக்க முடியாமல் போக தன்னுடைய வீடு வாசல் கார்களை விற்று மேலும் மேலும் அந்த படத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்தார். இருப்பினும் இறுதிவரை ஒரு தயாரிப்பாளராக அவர் அந்த திரைப்படத்தில் செயல்பட முடியவில்லை. இந்த சூழலில் கடன் தொல்லை அதிகமாகி அவர் சட்ட ரீதியாக வழக்குகளை சந்தித்து சிறை சென்று திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

44
Ma Subramaniam

Ma Subramaniam

ஆனால் அவர் சிறை சென்ற காலத்தில் அவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட அவரது கணவர் மற்றும் அவரது குழந்தைகள் கூட அவருக்கு உதவவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் சென்னையில் உள்ள பெருங்குடி அருகே ஒரு குடிசையில் அவர் இத்தனை காலம் வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், பத்திரிக்கையாளர் ஒருவர் அவரை அண்மையில் சந்தித்து பேசி இருக்கிறார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அண்மையில் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவரை நேரில் சந்தித்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து திரும்பியது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாராத எலிமினேஷன்; பிக்பாஸ் வீட்டிற்கு இந்த வாரம் குட் பை சொன்ன போட்டியாளர் இவர் தான்!

About the Author

AR
Ansgar R
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved