காயத்தையும் பொருட்படுத்தாமல் கஷ்டப்படும் அஜித்... தல மேனேஜர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை...!
தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நேர்கொண்ட பார்வை பட வெற்றிக்குப் பிறகு தல அஜித் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்ததோடு சரி, அதன் பின்னர் வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட்டையும் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிடவில்லை.
ஏன்? கடந்த தீபாவளி பண்டிகையின் போது கூட மாஸ்டர் டீசர், சிவகார்த்திகேயன் பட போஸ்டர், சிம்பு பட போஸ்டர், தனுஷ் ஜகமே தந்திரம் படத்திலிருந்து பாடல் என விதவிதமாக வெளியாகி சோசியல் மீடியாவில் தாறுமாறு ட்ரெண்டானது. ஆனால் தல அஜித் ரசிகர்களோ வலிமை படம் குறித்து எவ்வித அப்டேட் வரவில்லையே என காண்டில் சுற்றினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வலிமை படப்பிடிப்பு தளத்தில் தல அஜித்திற்கு மீண்டும் காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர் சிறிது நேர ஓய்விற்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் இது உண்மையா? இல்ல வழக்கமான வதந்தியா? என தெரியாமல் குழம்பினர்.
இந்நிலையில் தல அஜித்தின் வலிமை படம் குறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியான அஜித்திற்கு பைக் மற்றும் கார் சேசிங் மற்றும் பைட் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தல அஜித் ஸ்டைலாக பைக் ஸ்டேண்ட் செய்த போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில், வலிமை படத்தின் update கேட்டு கொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு...
படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட காயங்களை கூட பொருட்படுத்தாமல் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கும் திரு அஜித் குமார் அவர்களும், அனுபவமிக்க தயாரிப்பாளருமான திரு போனி கபூர் ஆகிய இருவரும் ஒருங்கிணைந்து "வலிமை" படத்தின் update குறித்து முடிவெடுத்து, தகுந்த நேரத்தில் வெளி இடுவார்கள். முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும், அவர்களது முடிவுக்கு மதிப்பு தரவும். என குறிப்பிட்டுள்ளார்.