ஷார்ட்ஸ், டீ-ஷர்ட் உடன் செம்ம கேஷுவலாக வெளியே அஜித்! சளைக்காமல் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து அசத்தல்!
அஜித்தே கடுப்பாகும் அளவிற்கு, ரசிகர்கள் 'வலிமை' அப்டேட் கேட்டு வந்த நிலையில்... திடீர் என மக்கள் முன்பு தல தோன்றி, ரசிகர்களின் செல்பிக்கு சளைக்காமல் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
தல அஜித்தை பொதுவெளியில் பார்ப்பது என்பது மிகவும் அரிது. தன்னுடைய பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கூட, சில காரணங்களால் கலந்து கொள்வதை தவிர்த்து விட்ட அவர், ரசிகர் மன்றங்களையும் கலைத்தார். என்பது அனைவரும் அறிந்தது தான்.
ஆனால் அஜித் ரசிகர்கள், அஜித் நற்பணி மன்றமாக மாற்றி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக அவரது பிறந்தநாள் மற்றும் திரைப்படம் குறித்த தகவல்கள் வந்தால், அதனை திருவிழாவை போல்... கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.
தற்போது அஜித் ரசிகர்களுக்கு உள்ள மிகப்பெரிய கவலை என்றால் அஜித், 'வலிமை' பட அப்டேட் கிடைக்கவில்லை என்பது தான். அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் அப்டேட்டைக் கேட்டு தல ரசிகர்கள் ஒவ்வொரு நாளும் செய்த செயல் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியில் துவங்கி, பாரத பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் அஸ்வின், என பலரிடமும் வலிமை அப்டேட் கேட்பதையே ஒரு வேலையாக வைத்திருந்தனர் அஜித் ரசிகர்கள்.
பொறுத்து பொறுத்து பார்த்த அஜித், ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு ஓவர் ஆட்டம் போடுவதை தாங்க முடியாமல், படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும் என்று அறிக்கை வெளியிட்டு தெரிவித்தார்.
இதை தொடர்ந்து சில அஜித் ரசிகர்கள் அஜித்தின் வார்த்தைகளை ஏற்கிறோம் என, சமூக வலைத்தளத்தில் கூறினர். ஆனால் இன்னும் சிலர் தொடர்ந்து 'வலிமை' அப்டேட் கேட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அஜித் திடீர் என பொதுவெளியில், மிகவும் கேஷுவலாக... ஷார்ட்ஸ் மற்றும் டி- ஷர்ட் அணிந்து வந்து, ரசிகர்களுடன் சளைக்காமல் செல்பி எடுத்து கொண்டுள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷன் அலுவலகத்திற்கு அஜித் வருகை தந்துள்ளார். அஜித் துப்பாக்கி சூடு பயிற்சி எடுக்கும் நிகழ்விடமான Rifil club இங்கு உள்ளதாக நினைத்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் Rifil club அமைந்துள்ள பழைய கமிஷனர் அலுவலகம் நோக்கி அஜித் புறப்பட்டார். அதற்குள் அவரை ரசிகர்கள் கண்டு பிடித்து விட்டதால், அவர்களுடன் சில நிமிடங்கள் மாஸ்க் அணிந்து பேசியதோடு மட்டும் இன்றி, செல்பி புகைப்படங்களும் எடுத்து கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.