MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சௌந்தர்யாவின் 100 கோடி ரூபாய் சொத்து... மோகன் பாபுக்கு சொந்தமானது எப்படி?

சௌந்தர்யாவின் 100 கோடி ரூபாய் சொத்து... மோகன் பாபுக்கு சொந்தமானது எப்படி?

தென்னிந்திய மொழி ரசிகர்களை தன்னுடைய துறுதுறு நடிப்பால் வசீகரித்த, நடிகை சொந்தர்யாவின் ரூ.100 கோடி ரூபாய் சொத்தை, நடிகர் மோகன் பாபு சொந்தமாக்கி கொண்டதாக தெலுங்கு திரையுலகில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. இதுகுறித்த முழு விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம். 

3 Min read
manimegalai a
Published : Oct 03 2024, 08:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Soundarya

Soundarya

தென்னிந்திய திரையுலகில், தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்கள் மனதை மயக்கியவர் நடிகை சௌந்தர்யா. பெங்களூரை சேர்ந்த நடிகை சொந்தர்யா தன்னுடைய 20 வயதில், அதாவது 1992-ஆம் ஆண்டு Gandharva என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடிக்க துவங்கினார். 

குறிப்பாக தமிழில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் 1993-ஆம் ஆண்டு வெளியான, பொன்னுமணி படத்தில் நவரச நாயகன் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் ஃபேவரட் நாயகியாக மாறிய சௌந்தர்யா, இதை தொடர்ந்து முத்து காளை, சேனாதிபதி, அருணாச்சலம், காதலா காதலா, மன்னவரு சின்னவரு, சொக்க தங்கம், படையப்பா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.

25
Soundarya Cinema carrier

Soundarya Cinema carrier

சாவித்திரிக்குப் பிறகு, அவர் எட்டிய அளவிலான புகழ் நடிகை சௌந்தர்யாவுக்கு மட்டுமே கிடைத்தது. தமிழில் இவருக்கு இருந்த வரவேற்பு போலவே தெலுங்கிலும் இருந்தது. இதன் காரணமாகவே மற்ற மொழி படங்களை விட, தெலுங்கில் சௌந்தர்யா அதிகமான படங்களை நடித்தார். அதே போல் கோடி ரூபாய் கொடுத்தாலும், ரசிகர்கள் முகம் சுழிக்கும் விதத்தில் உடை அணிந்து நடிக்க மாட்டேன் என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார் சௌந்தர்யா. 

நடிகையாக அறிமுகம் ஆனதில் இருந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து படு பிஸியான ஹீரோயினாக வலம் வந்த, சௌந்தர்யா... மிக குறுகிய காலத்திலேயே கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியாக மாறினார். திரையுலகில் வாய்ப்புகள் குறைய துவங்கிய பின்னர்,  வீட்டில் பார்த்த தொழிலதிபர் மாப்பிள்ளையாக ரகு  என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

வாலி முதல் ... நா.முத்துகுமார் வரை; அபூர்வ பறவையின் பெயரை 10 பாடல்களில் பயன்படுத்திய கவிஞர்கள்!

35
Soundarya Properties

Soundarya Properties

திருமணத்திற்கு பின்னர் அரசியலில் நுழைந்த சௌந்தர்யா, தன்னுடைய கட்சியின் பிரச்சார பணிக்காக ஹெலிகாப்டரில் தன்னுடைய சகோதரருடன் சென்ற போது, இவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சௌந்தர்யாவின் மரணத்திற்கு பின்னர் இவர் நடித்து சம்பாதித்த கோடி கணக்கிலான சொத்துக்களை... சௌந்தர்யாவின்  கணவர் அபகரித்து கொண்டு.. மறுமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அவர் மீது சௌந்தர்யாவின் பெற்றோர் இது தொடர்பாக வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கின் சௌந்தர்யாவின் பெற்றோருக்கு சாதகமாக தீர்ப்பாகி, பாதி சொத்துக்கள் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 

45
Soundarya 100 Crore Property

Soundarya 100 Crore Property

இது ஒருபுறம் இருக்க, சௌந்தர்யாவின் சொத்துக்களில் ஹைதராபாத்தில் உள்ள சம்ஷாபாத் பகுதியில் 6 ஏக்கர் நிலமும் ஒன்று இருந்தது. அதை சௌந்தர்யா தனது பெற்றோர் பெயரில் எழுதி வைத்தார்.  அந்த சொத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால், அந்த சொத்து இப்போது மூத்த டோலிவுட் நடிகர் மோகன் பாபுவின் வசம் இருப்பதாக கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியம்  என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம். உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியுமா.?

விபத்தில் சிக்கி காயங்களுடன் உயிர் தப்பிய பிரியங்கா மோகன்! என்ன ஆச்சு?
 

55
Mohan babu

Mohan babu

சௌந்தர்யாவின் மரணத்திற்குப் பிறகு, நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த அவரது பெற்றோர் , இந்த நிலத்தைன் மோகன் பாபுவுக்கு விற்றதாக கூறப்படுகிறது. தற்போது மோகன் பாபு அந்த இடத்தில் மிக பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ளார். மஞ்சு டவுன்ஷிப் என்ற பெயரில் கட்டப்பட்ட அந்த வீட்டில்தான் அவர் வசித்து வருகிறாராம். இருப்பினும், இந்த இடத்தை அவர் உண்மையில் சௌந்தர்யாவின் குடும்பத்திடமிருந்து வாங்கினாரா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால்.. திரைத்துறையில் இதுபற்றிய பேச்சு அடிபட்டு வருகிறது. 

நடிகை சௌந்தர்யா, தன்னுடைய 27 வயதில்... உயிரிழந்த போது 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.  2004 ஆம் ஆண்டு, அவர் இந்த மண்ணை விட்டு மறைந்திருந்தாலும்... அவர் இருந்து சுமார் 20 ஆண்டுகள் ஆகி இருந்தாலும், தற்போது வரை ரசிகர்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவரின் மரணம். ஒட்டு மொத்த திரையுலகிற்குமே பேரிழப்பு என ரசிகர் முதல் பிரபலங்கள் வரை கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சௌந்தர்யா
ரஜினிகாந்த்
சௌந்தர்யா மரணம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved