சுஷாந்துக்கு பல குரல்கள் கேட்பதாக சொன்னார்! 3 படத்தில் தனுஷுக்கு வந்த அதே மனநோய்! பிரபலம் வெளியிட்ட அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறான MS Dhoni untold Story என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவின் பட்டி, தொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறான MS Dhoni untold Story என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியாவின் பட்டி, தொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
34 வயதான இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சுஷாந்த் கடைசியாக நடித்துள்ள Chhichhore படம் தற்கொலைக்கு எதிராக போராடி வெல்வது பற்றியது. இப்படிப்பட்ட படத்தில் நடித்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையி சுஷாந்த் சிங் மனநிலை குறித்து, எழுத்தாளர் சுகரித்தா செங்குப்தா, கடைசியாக சுஷாந்த்தைசந்தித்தது பற்றி, இதுவரை வெளியிடாத தகவலை கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார். அவருடைய மனநிலை மற்றும் மன அழுத்தம் காரணமாகவே சுஷாந்தின் காதலி ரேஹா சக்ரவர்த்தியை விலகியதாகவும் கூறியுள்ளார்.
சில சமயங்களில் சுஷாந்த் உச்சகாக இருந்தாலும், நடுவில் மனசோர்வை வெளிப்படுத்துவார். இதற்காக மருத்துவரை அவர் சென்று பார்த்த போதிலும், முறையாக மருந்துகள் எடுத்து கொள்வதை தவிர்த்தார். ஆனால் இவரை மருந்துகள், மற்றும் மெடிடேஷன் போன்றவற்றால் மற்றுமே பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என ரேஹா உள்ளிட்ட அவரது நண்பர்கள் அறிவுறுத்தும் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை.
மருந்து உட்கொள்ளாததால், சுஷாந்தின் மன அழுத்தம் அதிகரித்தது.
மேலும் "கடந்த ஒரு வருடத்தில், சுஷாந்த் தன்னுடைய அணைத்து வெளிப்புற தொடர்புகளிலிருந்தும் தன்னை முழுவதுமாக தனிமை படுத்திக்கொண்டார். ரேஹா சுஷாந்தின் காதல் தொடர்பில் தான் இருந்துள்ளார். சுஷாந்த் குரல்களைக் கேட்கத் தொடங்கிய பின்னர். மக்கள் அவரைக் கொல்ல முயற்சிப்பதை அவர் உணரத் தொடங்கினார்.
ஒரு நாள் ஒரு அனுராக் காஷ்யப் படம் சுஷாந்தின் வீட்டில் ஓடிக்கொண்டிருந்த போது, அவர் ரேஹா விடம், ‘நான் காஷ்யப்பின் படங்கள் வேண்டாம் என்று சொன்னேன். இப்போது அவர் என்னைக் கொல்ல வரப் போகிறார் என கூறி அதிர வைத்துள்ளார். ’அதுதான் சுஷாந்துடன் இனி தங்குவது பாதுகாப்பு இல்லை என ரேஹா மனதில் பயத்தை விளக்க காரணமாக அமைந்தது. ரேஹா சுஷாந்த்துடன் கொண்ட உறவை விட்டு விலகவும் செய்தார்.
மேலும் சுஷாந்தின் சகோதரிகள் மும்பைக்கு வந்து அவரை பார்த்து கொள்ள வேண்டும் என ரேஹா காத்திருந்தார். சுஷாந்தின் சகோதரிகள் அவரை ஆதரிக்கவும் ஆறுதலளிக்கவும் முயன்றனர். ஆனால் அவர் யாருடைய பேச்சைக்கும் க கேட்கவும் இல்லை. தன்னுடைய மருந்துகளை உட்கொள்ள மறுத்துவிட்டார்.
அவரது இறுதி மாதங்களில், சுஷாந்த் தனது சொந்த மன சிறையில் அடைக்கப்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டார். அவர் யாரோ தன்னிடம் பேசுகிறார் என்பதை மட்டுமே உணர்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அவருடைய நண்பர் தெரிவித்துள்ளார். கிட்ட தட்ட சுஷாந்த், 3 படத்தில் தனுஷ் எப்படி இருவர் தன்னிடம் பேசும் போது, மனதளவில் பாதிக்கப்படுவாரோ... அதே போன்ற மன அழுத்தத்தால் தான் இன்று, சுஷாந்த் உயிரிந்ததாக அவருடைய நண்பர் சுஹாரிக்க கூறியுள்ளார்.