MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Suriya : பிப்.4-ல் ரிலீஸ் ஆகுமா எதற்கும் துணிந்தவன்?!! காத்திருக்கும் சூர்யா... அனுமதி கொடுப்பாரா ஸ்டாலின்?

Suriya : பிப்.4-ல் ரிலீஸ் ஆகுமா எதற்கும் துணிந்தவன்?!! காத்திருக்கும் சூர்யா... அனுமதி கொடுப்பாரா ஸ்டாலின்?

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்து தான் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் உறுதிப்படுத்தப்படுமாம்.

1 Min read
Ganesh A | Asianet News
Published : Jan 21 2022, 08:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) ஹீரோவாக நடித்துள்ளார். ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் நடித்த சூர்யா தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ளார்.

25

இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, தேவதர்சினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். 

35

எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் பிப்ரவரி மாதம் 4-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் திட்டமிட்டபடி படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

45

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. 

55

ஜனவரி 31-ந் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். அதன்பின் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா அல்லது தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பதை பொறுத்து தான் எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் உறுதிப்படுத்தப்படுமாம். ஒருவேளை தளர்வுகள் அறிவிக்கப்பட்டால், இப்படத்தை பிப்.4-ம் தேதிக்கு பதில் பிப்.11-ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். அதே வேளையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டால் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளார்களாம். முதல்வரின் அறிவிப்பை பொறுத்தே படக்குழுவின் அடுத்தக்கட்ட முடிவு இருக்கும் என கூறப்படுகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்
சூர்யா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved