வயசானாலும் வேற லெவல்! சுயநலமாக யோசித்த போட்டியாளர்கள்! ஒத்த செயலால் மிரள வைத்த சுரேஷ்..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ, இதுநாள் வரை வாயாலேயே வடை சுட்டு வந்த சுரேஷின் மீது மிகப்பெரிய மரியாதையை வர வைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதோ டாஸ்க் வைக்கப்படுகிறது. இதில், ரியோ, வேல்முருகன், கேபிரில்லா, ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இதில் கேபிரில்லாவுக்கு யார் ஆதரவு கொடுக்கிறீர்கள் என பிக் பாஸ் கேட்டபோது, ஒற்றை ஆளாக நின்று ஆதரவு தருகிறார் சுரேஷ்.
இவருடன் எந்நேரமும் சுற்றி வந்த ஆஜித், பாலாஜி கூட தங்களுடைய ஆதரவை இவருக்கு தரவில்லை.
இதை தொடர்ந்து ஆதரவு கொடுப்பவர்கள், இந்த மூன்று போரையும் தூக்கி கொண்டு ஒரு கட்டத்திற்குள் நிற்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஆரி வேல்முருகனையும், பாலாஜி ரியோவையும் தூக்கி கொள்கிறார்கள். இவர்களுக்கு சிலர் ஆதரவும் தருகிறார்கள்.
அதே நேரத்தில் கேபிரில்லாவை சுரேஷ் வேர்க்க விறுவிறுக்க தூக்கி நிற்கிறார்.
இது தான் ஸ்பிரிட், கையை விட்டு விடாதே என அவர் கூறி கொண்டிருக்கும் போதே... கேபிரில்லா வேண்டாம் தாத்தா, என கீழே இறங்கி விடுகிறார்.
அவருடைய வயதையும், அவர் படும் கஷ்டத்தையும் பார்த்து தான் கேபிரில்லா இந்த முடிவை எடுக்கிறார்.
பின்னர், அவரை கட்டி பிடித்து தன்னுடைய நன்றியையும் பாசத்தையும் தெரியப்படுத்துகிறார். இந்த காட்சி பார்க்கும் ரசிகர்கள் கண்களையே கலங்க வைத்துள்ளது.