நம்ம சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியா இது?.... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு அழகில் மெருகேறிய போட்டோஸ்...!
சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று பட்டி தொட்டி எல்லாம் புகழ் பெற்ற நாட்டுப்புற பாடகி ராஜலட்சுமியின் லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் டி.வி. ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, அதில் பங்கேற்று வெற்றி பெற்றும் நபர்களும் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமாகிவிடுகின்றனர்.
அப்படி விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என பல லட்ச கணக்கில் ரசிகர்கள் உண்டு.
நாட்டுபுற பாடகர்களான செந்தில் - ராஜ லட்சுமி இருவரும் 2018ம் ஆண்டு வெளியான சூப்பர் சிங்கர் 6 சீசனில் பங்கேற்றனர்.
அந்த நிகழ்ச்சியிலும் நாட்டுப்புற பாடல்களை பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை கணவன் - மனைவி இருவரும் கவர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியின் பைனல் வரை வந்த செந்தில் முதல் பரிசை தட்டிச்சென்றார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் பாடும் வாய்ப்பையும் பெற்றனர்.
சமீபத்தில் நாட்டுப்புற பாடகியான ராஜலட்சுமி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
எப்போதும் கொசுவம் வைத்து கட்டிய புடவை, படிய வாரிய தலை என கிராமத்து பெண்ணாகவே வலம் வந்துகொண்டிருந்த ராஜலட்சுமியின் இந்த அதிரடி மாற்றம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
செம்ம கிராண்டான மேக்கப், கண்ணை பறிக்கும் நகைகள், தலை நிறைய மல்லிகைப்பூ என அசத்தலாக போஸ் கொடுத்திருக்கிறார்.
பிறை நிலா போன்ற நெற்றி சுட்டியில் பார்க்க செம்ம அழகாக இருக்கும் ராஜலட்சுமி
வானம் பார்த்து புன்னகைக்கும் அழகு தேவதை ராஜலட்சுமி
அளவான மேக்கப், கழுத்து நிறைய நகைகள் என ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த ராஜலட்சுமி