சன் டிவியில் முடிவுக்கு வருகிறது 2 சீரியல்கள்..? கவலையில் சின்னத்திரை ரசிகர்கள்!
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுவது இல்லை. ஒரு சில சீரியல்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்திற் பிடிக்கிறது.
அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சியில், இல்லத்தரசிகள் இதயங்களை கவர்ந்த இரண்டு சீரியல் அடுத்தடுத்து முடிக்கப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், இந்த சீரியலில் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.
டி.ஆர்.பி யில் முதல் மூன்று இடத்தை மாற்றி மாறி கைபற்றிவரும் ரோஜா... சீரியலில், ரோஜா அவருடைய அம்மாவை விரைவில் காண போகிறார் என்பது போன்ற காட்சிகள் இடம்பெற உள்ளது.
அவர் தன்னுடைய அம்மாவை சந்தித்து விட்டால், அனு பற்றிய உண்மை வெளியாகும். அதே போல் ரோஜாவின் தந்தை மாணிக்கம் என்பதும் தெரியவரும். எனவே விரைவில் ரோஜா சீரியல் முடிய உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் சீரியல் தான் முடிவுக்கு வரப்போகிறதாம். எனவே இந்த தகவல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.