செம்ம அழகு... மகன், மகளின் புகைப்படங்களை வெளியிட்ட சினேகா - பிரசன்னா...!
தனது வீட்டில் நடக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும் சினேகா - பிரசன்னா தம்பதி சோசியல் மீடியா மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
தமிழைத் தாண்டி தெலுங்கு, மலையாளம் திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிக்காமலேயே இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.
2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
2009 ஆம் ஆண்டில் வெளியான “அச்சமுண்டு அச்சமுண்டு “ படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
2015 ஆம் ஆண்டு இந்த தம்பதிக்கு விஹான் எனும் மகன் பிறந்தார். இதற்கு பின் மீண்டும் சினேகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதில், வேலைக்காரன் படம் சொல்லிக் கொள்ளும்படி அமைந்தது.
மீண்டும் கர்ப்பமாக இருந்த சினேகாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. அச்சு அசலாக சினேகா போலவே இருக்கும் மகளுக்கு ஆத்யந்தா என பெயர் சூட்டியுள்ளனர். இந்த ஸ்டார் தம்பதி.
தனது வீட்டில் நடக்கும் அத்தனை நல்ல விஷயங்களையும் சினேகா - பிரசன்னா தம்பதி சோசியல் மீடியா மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் தற்போது செல்ல மகன் - மகளின் க்யூட் போட்டோக்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
செல்ல மகள் பிறந்த மகிழ்ச்சியில் சினேகா - பிரசன்னா
சினேகா - பிரசன்னாவின் குட்டி தேவதை ஆத்யந்தா
தங்கையின் அருகில் சந்தோசமாக சிரித்துக் கொண்டிருக்கும் விஹான்