வீட்டு தோட்டத்தை மகள் ஆராதனாவுடன் பார்வையிடும் சிவகார்த்திகேயன்..! கியூட் புகைப்படங்கள்..!
நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய மகள் ஆராதனாவுடன் சேர்ந்து, வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளை ஆர்வமுடன் சுற்றி பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகி, சிவகார்த்திகேயன் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிரபலங்களின் வாரிசுகள் எது செய்தாலும், அது அவர்களது ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு விடுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா, சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான 'கனா' படத்தில் அவருடன் சேர்ந்து 'வாயாடி பெத்தபுள்ள' என்கிற பாடலை பாடி இருந்தார்.
இவரது மழலை குறளுக்காகவே இந்த பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியான இரண்டே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. மேலும் இவருக்கு உள்ள பாடல் திறமையும் இதன் மூலம் ரசிகர்களுக்கு தெரியவந்தது.
இந்த பாடல் மூலம் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவுக்கு பல ரசிகர்களும் உருவாகி விட்டனர். இந்நிலையில் தன்னுடைய மகளுடன் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படமும் ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தில், சிவகார்த்திகேயன் தன்னுடைய வீட்டு தோட்டத்தில் உள்ள செடிகளை பார்த்து ரசிக்கிறார். அவருடன் ஆராதனாவும் உள்ளார்.
இதை பார்த்து ரசிகர்கள் பலர், இவ்வளவு சின்ன வயதில் சிவகார்த்திகேயன் மகன் ஆராதனாவுக்கு செடிகள் வளர்ப்பதில் என்ன ஒரு ஆர்வம் என, மனதார தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் செடி வளர்ப்பதன் அவசியம் குறித்தும், விவசாயம் மற்றும் விவசாயிகளின் அருமை குறித்து பேசுவது மட்டும் கூடாது செயலிலும் காட்ட வேண்டும் என்பதற்கு இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய உதாரணம்.