புற்றுநோயால் அவதி படும் நடிகர் தவசிக்கு முதல் ஆளாக உதவிய நடிகர் சிவகார்த்திகேயன்..! குவியும் பாராட்டு..!
அந்த வகையில் தற்போது நடிகர் சேவகார்திகேயன், தன்னுடைய ரசிகர்கள் மன்றம் மூலம் உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது உதவிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
தமிழில் பல படங்களில் மாமா, கட்ட பஞ்சாயத்து செய்யும் பெரியவர், ஊர் பூசாரி போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் மீசை தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்துள்ளார்.
கருப்பன்… குசும்புக்காரன்…என்று இவர் பேசும் டயலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவு பிரபலம்.
‘களவாணி’, ‘சுந்தரபாண்டியன்’, ‘ஜில்லா’, ‘வீரம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பெரிய மீசையும், தாடியும், கட்ட குரலும் தான் அவருடைய தனிப்பட்ட அடையாளமாகவே ரசிகர்களால்பார்க்கப்பட்டது. சினிமாவில் மிகப்பெரிய கனவுகளுடன் அலைந்து தற்போது துணை நடிகராக வெளியே தெரிய ஆரம்பித்துள்ள மீசை சமீப காலமாக திரைப்படங்களில் பார்க்க முடியவில்லை.
இந்த நிலையில் தான் ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில் அவர் புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் செய்தி நேற்று வெளியானது.
கட்டுமஸ்தான தேகத்துடன் மீசை தடவிக்கொண்டு காட்சியளித்து வந்த தவசி, புற்றுநோயின் தாக்கத்தால் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு எலும்பும் தோலுமாக இளைத்து போயுள்ளார். இவரது தோற்றம் பலரை அதிர்ச்சியடைய செய்தது.
தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் அவருடைய மகன் உதவி கேட்டு தனது தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து தவசியின் சிகிச்சைக்கு பலர் தங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்திகேயன், தன்னுடைய ரசிகர்கள் மன்றம் மூலம் ரூபாய் 25,000 கொடுத்து உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இவரது உதவிக்கு பாராட்டுகளும் குவிந்து வருகிறது.