இறந்த கணவரின் கட்-அவுட்டை பக்கத்தில் நிற்க வைத்து நடிகை மேக்னா ராஜுக்கு நடந்த வளைகாப்பு..!
கணவர் உயிருடன் இல்லாததால் கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்துக் கொண்டு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.
பிரபல நடிகை மேக்னா ராஜின் கணவரும் பிரபல கன்னட நடிகரும், ஆக்சன் கிங் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார்.
இவரின் இந்த திடீர் மரணம் ஒட்டு மொத்த திரையுலகத்தை சேர்ந்தவர்களை அதிர்ச்சியடைய செய்தது.
மேலும் சிரஞ்சீவி சர்ஜா இறந்த சமயத்தில், மேக்னா ராஜ் நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த தகவலும் வெளியானது.
குழந்தை பிறக்க உள்ள தகவலை அறிவிக்க தேதி பார்த்து வந்த நேரத்தில் தான் இந்த அசம்பாவிதம் அரங்கேறியது.
இந்த நிலையில் மேக்னாராஜ்க்கு வளைகாப்பு வைபவம் நடத்தப்பட்டு உள்ளது.
கணவர் உயிருடன் இல்லாததால் கணவரின் கட்-அவுட்டை அருகில் வைத்துக் கொண்டு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவு செய்து ’ஒளிரச் செய்யும் உங்களின் சிரிப்பை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றேன் என்றும் ’நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்’ என்றும் அவர் மிகவும் உருக்கமாக அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவு செய்துள்ளார்.மேக்னா ராஜ் வெளியிட்டுள்ள வளையகாப்பு புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வருகிறது.