MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யா 44; கோலிவுட்டில் 7 ஆண்டுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் டாப் நடிகை!

சூர்யா 44; கோலிவுட்டில் 7 ஆண்டுக்கு பிறகு ரீ-என்ட்ரி கொடுக்கும் டாப் நடிகை!

Suriya 44 : பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தனது 44வது படத்தில் நடித்து வருகின்றார் பிரபல நடிகர் சூர்யா.

2 Min read
Ansgar R
Published : Nov 19 2024, 08:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Suriya 44

Suriya 44

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவான "கங்குவா" திரைப்படம் தற்பொழுது தன்னுடைய நான்காவது நாளில் பயணித்து வருகிறது. உலக அளவில் 150 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து, தற்பொழுது அப்படம் பயணித்து வரும் நிலையில், சூர்யா தன்னுடைய அடுத்த திரைப்பட பணிகளை விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே சூர்யாவின் 44வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தான் அவர் இப்போது நடித்து வருகிறார்.

துபாயில் பல கோடி சொத்துக்கு அதிபதி; கீர்த்தியை திருமணம் செய்ய உள்ள அந்தோணி தட்டில் யார்?

24
Kanguva

Kanguva

வருகின்ற 2025ம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் உருவாகும் அந்த திரைப்படம் வெளியாக உள்ளது. ஏற்கனவே அந்தமான் உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில், இப்படத்திற்கான சூர்யாவின் தோற்றமும் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் முதல் முறையாக சூர்யா நடித்து வரும் நிலையில், மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை அந்த திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அந்த திரைப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

34
Suriya 44 movie

Suriya 44 movie

தெலுங்கு மொழி மூலம் தன்னுடைய திரைப்பட பயணத்தை தொடங்கி, கடந்த 2003ஆம் ஆண்டு தமிழில் வெளியான "எனக்கு 20 உனக்கு 18" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஸ்ரேயா சரண். தொடர்ச்சியாக தமிழில் "மழை", "திருவிளையாடல் ஆரம்பம்", சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "சிவாஜி", விஜயின் "அழகிய தமிழ் மகன்", "தோரணை" மற்றும் விக்ரமின் "கந்தசாமி" உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்த பிறகு கொஞ்ச காலம் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட அவர் தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இறுதியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

44
Shriya Saran

Shriya Saran

இந்த சூழலில் சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து தற்பொழுது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவருடைய 44-வது திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் அவர் நடனமாடியுள்ளதாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கழித்து ஒரு தமிழ் திரைப்படத்தில் மீண்டும் தோன்றுவது தனக்கு மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும், நடிகர் சூர்யாவோடு முதல் முறை தான் இணைய உள்ளதாகவும் கூறியிருக்கிறார் ஸ்ரேயா சரண்.

மனதை விட்டு நீங்காத விவேக்கின் 4 கதாபாத்திரங்கள்!

About the Author

AR
Ansgar R

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved