#BREAKING அடக்கடவுளே... சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான அப்பட்டமான உண்மை...!
அதற்கு எல்லாம் பதிலாக பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த தகவல்கள் சில கிடைத்துள்ளன.
பாண்டியன் ஸ்டோரஸ் சீரியல் நடிகை சித்ரா நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவுடன் அவருடைய கணவரான ஹேமந்த் ரவியும் ஒன்றாக் தங்கியிருந்தனர். பிப்ரவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதமே பெற்றோர்கள் சம்மதத்துடன் பதிவு திருமணம் நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சித்ராவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்படும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் சித்ராவின் உடலை கூராய்வு செய்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த உடற்கூராய்வு சரியாக 12.35 மணி அளவில் நிறைவுற்றது. இதையடுத்து சற்று நேரத்திலேயே உடல் சித்ராவின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிணவறை வாசலில் காத்திருந்த உறவினர்கள், ரசிகர்கள் என நூற்றுக்கணக்கானோர் சித்ராவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
சித்ராவின் மரணம் குறித்து கணவர் ஹேமந்திடம் போலீசார் இரண்டாவது நாளாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சக நடிகர், நடிகைகள், இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்களிடமும் அடுத்தடுத்து போலீசார் விசாரணை நடத்தி திட்டமிட்டிருந்தனர். மேலும் சித்ரா தங்கியிருந்த ஓட்டல் உரிமையாளர், ஊழியர்களிடமும் காலை தீவிர விசாரணை நடைபெற்றது.
சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல என அவருடைய பெற்றோரும், சக நடிகர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவருடைய மரணம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அதற்கு எல்லாம் பதிலாக பலரும் எதிர்பார்த்து காத்திருந்த பிரேத பரிசோதனை அறிக்கை குறித்த தகவல்கள் சில கிடைத்துள்ளன.
அதன்படி சித்ரா தற்கொலை தான் செய்து கொண்டார் என்றும், முகத்தில் இருக்கும் நகக்கீறல்கள் சித்ராவினுடையது தான் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சித்ராவின் மரணம் தற்கொலை என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்கொலைக்கு காரணம் யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.