பாண்டியன் ஸ்டோர் சீரியல் நிறுத்தப்படுகிறதா..? உண்மை என்ன... தீயாக பரவும் தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
சமூக வலைத்தளத்தில் பாண்டிய ஸ்டோர் சீரியல் நிறுத்தப்படுவதாக வெளியான தகவல், இந்த சீரியலின் ரசிகர்களை பேரதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், கூட்டு குடும்பத்தின் பாசத்தை போற்றும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'பாண்டியன் ஸ்டோர்'.
வானத்தை போல, ஆனாந்தம், போன்ற அண்ணன் தம்பிகள் பாச கதைக்கு ரசிகர்கள் மத்தியில் எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ அதே வரவேற்பு இந்த சீரியலுக்கும் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது.
மற்ற சீரியல் கதைகள் போல், வில்லி, கொலை, போலீஸ், விறுவிறுப்பு, பரபரப்பு, நயவஞ்சகம் போன்ற கோணத்தில் கொண்டு செல்லாமல் பாசத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து இந்த சீரியலை நகர்த்தி செல்லும் விதம் கூடுதல் சிறப்பு.
இந்த சீரியலுக்கு மட்டும் அல்ல, இந்த சீரியலில் நடித்து வரும் பிரபலங்களுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர்.
அப்படி இந்த சீரியலில் முல்லையாக வாழ்ந்து, தற்கொலை செய்து கொண்டு மறைந்த நடிகை சித்ராவின் நினைவுகளில் இருந்து ரசிகர்கள் பலர் இன்னும் வெளியே வரவில்லை.
தற்போது சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில், 'பாரதி கண்ணம்மா' காவியா நடித்து வருவதும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் விறுவிறுப்புகளுக்கும், சந்தோஷங்களுக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வரும், இந்த சீரியல் பொங்கலுடன் முடிவடைய உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவியது.