ஏற்கனவே தற்கொலைக்கு முயற்சித்தாரா சித்ரா? தீயாய் பரவும் பகீர் தகவல்..!
கணவர் ஹேமந்த்தின் சந்தேக பார்வையால், ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, டிசம்பர் 9 ஆம் தேதி சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், இவர் ஏற்கனவே தற்கொலைக்கு முயன்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.
இதனிடையே சித்ராவை பதிவு திருமணம் கொண்ட அவருடைய கணவர் ஹேமந்த் ரவியிடம் நசரத்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சித்ரா - ஹேமந்த் கடந்த அக்டோபர் மாதம் தான் திருமணம் நடந்துள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வரும் நிலையில், நேற்று இரவு சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சித்ரா மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவருடன் அடிக்கடி சண்டையிட்டதும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நெருக்கமான காட்சிகளில் சித்ரா நடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அடுத்தடுத்து விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. .
மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டும் படியான வார்த்தைகளை கூறி, அவர் சித்ராவை திட்டியதும் விசாரணையில் தெரிய வந்ததை தொடர்ந்து, ஹேமந்தை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். தொடர்ந்து 15 நாட்கள் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஏற்கனவே, சித்ரா தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. எந்த அளவிற்கு இந்த தகவல் உண்மை என்பது இதுவரை வெளியாகாத நிலையில்...இது சித்ராவின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.