அடித்து கொண்டு அழும் ஷிவானி - ரம்யா பாண்டியன்..! வலிமையை நிரூபிக்க போராடும் சிங்க பெண்கள்..!
பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி நாட்களை நெருங்க நெருங்க டாஸ்குகளும் கடுமையாகிக்கொண்டே செல்கிறது. அந்த வகையில் ரம்யா - ஷிவானிக்கு இடையே நடைபெறும் கடுமையான போட்டி குறித்து தான் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றி பெறுவதற்காக போட்டியாளர்கள் கடுமையாக, தங்களுடைய கருத்துக்களை முதல் இரண்டு புரோமோக்களில் முன்வைத்ததை பார்த்தோம்.
இதை தொடர்ந்து வெளியாகியுள்ள, மூன்றாவது புரோமோவில்.. ஷிவானி மற்றும் ரம்யா இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
முதலில் ஒரு கயிறை ஷிவானி மற்றும் ரம்யா ஆகியோர் பிடித்திருக்கும் காட்சி காட்டப்படுகிறது.
ஒரே இடத்தில் நின்றபடி இவர்கள் கயிறை பிடித்துக்கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் இருவருக்கும் அழுகையே வந்து விடுகிறது.
இதை தொடர்ந்து ஒரு கையில் கயிறை பிடித்து கொண்டு, ஸ்மைலி பந்துகளை கொண்டு ஒருவருக்கொருவர் அடித்து அழுதபடியே இருவருமே சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிங்க பெண்ணே பாட்டை பிக்பாஸ் ஒளிபரப்ப மற்ற போட்டியாளர்களை அதனை பாடி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
இந்த சுற்றில் வெற்றி பெற்று யார் சிங்கப்பெண் என நிரூபிப்பார்கள் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.