படுக்கையை பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு..! ஷாலு ஷம்முவின் மீடூ புகாரில் சிக்கிய பெரிய நடிகர் யார்?
நடிகை ஷாலு ஷம்மு, படுக்கையை பகிர்ந்தால் தான் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01et9mty4m4c1b3v2zkj3fyk0h/3-jpg_300x348xt.jpg)
அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இரண்டாம் குத்து படத்தில் நடித்திருந்தார். தற்போது பவுடர் படத்தில் நடித்து வருகிறார்.
ஹீரோயின் வாய்ப்பிற்காக படுகவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் ஷாலு ஷம்மு, காதலர் தின ஸ்பெஷலாக உச்சகட்ட கவர்ச்சியில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தற்போது பரபரப்பாக மீடூ புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவரது பதிவு ஒன்றில், ‘பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க காம்ப்ரமைஸ் செய்து கொள்ள தவறினால் அவர்களது திறமை நிராகரிக்கப்படுகிறது. என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தான் மீடூவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜய்தேவரகொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறி ஷாலு ஷம்மு பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.