MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஷாருக்கானுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீண்டும் ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி... சோகத்தில் குடும்பத்தினர்!

ஷாருக்கானுக்கு காத்திருந்த அதிர்ச்சி... மீண்டும் ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி... சோகத்தில் குடும்பத்தினர்!

ஷாருக்கானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) , போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று, அக்டோபர் 20 ஆம் தேதி இவரது ஜாமீன் மனு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதனை நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Oct 20 2021, 03:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான், போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

26

தற்போது தன்னுடைய மகனை ஜாமீனில் வெளியே கொண்டு வர, ஷாருக்கானின் குடும்பத்தினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். ஏற்கனவே மும்பையின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சதீஷ் மன்ஷிண்டே ஆர்யனின் வழக்கை நடத்தி வந்த நிலையில், திடீர் என புதிய வழக்கறிஞர் ஒருவரையும் நியமித்தார் ஷாருகான்.

 

36

ஆர்யன் கானின் ஜாமீன் மனு அக்டோபர் 8 ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் அக்டோபர் 11 அன்று, இந்த விவகாரம் என்டிபிஎஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அமித் தேசாய் நீதிமன்றத்தில் ஆரியனின் வழக்கை எதிர்த்துப் போராடி, அவரது ஜாமீன் மனுவை விசாரிக்க அடுத்த தேதியை கோரினார்.

 

46

இப்போது ஆர்யனின் ஜாமீன் நீதிமன்றத்தில் இன்று அதாவது அக்டோபர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் ஆர்யன் கான் தரப்பில் இருந்து இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

56

இன்றைய தினம் (அக்டோபர் 20 ) ஆம் தேதி இவருடைய வழக்கை விசாரணை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. அதில், ஆர்யன் கான், அர்பாஸ் மெர்ச்சன்ட் உட்பட 3 பேருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்து, அவர்களின் ஜாமின் மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தது.

 

66

எப்படியும் மகனை வெளியே கொண்டு வர துடித்து கொண்டிருக்கும் ஷாருகான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இதுவரை மகனை ஜாமீனில் கூட வெளியே கொண்டு வர முடியாததால் கடும் சோகத்தில் உள்ளனர்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பாக்யராஜால் என் வாழ்க்கையே போச்சு!" - நண்பனைச் சீண்டும் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.! வைரலாகும் வீடியோ!
Recommended image2
மனைவியை பிரிந்த சோகத்தில் தனுஷ் எழுதிய லவ் பெயிலியர் சாங் பற்றி தெரியுமா?
Recommended image3
சிம்பிளாக நடந்த திருமணம்... பாடகர் வேடனின் மனதை கொள்ளையடித்த அந்த பெண் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved