நீருக்கடியில் காதலருடன் ரொமான்டிக் போட்டோ ஷூட்... சின்னத்திரை நடிகையின் வைரல் போட்டோஸ்...!
சின்னத்திரை நடிகை சரண்யா காதலருடன் தண்ணீருக்கு அடியில் நடத்திய போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிரபல செய்தி நிறுவனங்களில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின்னர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார் சரண்யா.
சின்னத்திரையில் சரண்யா நடிப்பில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்தது.
இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து தெலுங்கில் ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்தார்.
இடையில் சன் தொலைக்காட்சியில் வெளியான ரன் என்ற சீரியலில் நடித்து வந்த சரண்யா அதிலிருந்து பாதியில் விலகினார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது சரண்யா ராகுல் என்பவரை காதலித்து வருகிறார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் சரண்யா காதலருடன் எடுத்துக்கொள்ளும் கலர்ஃபுல் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.
தற்போது தனது காதலருடன் நீருக்கு அடியில் செம்ம ரொமாண்டிக்கான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.
கடலுக்கடியில் காதல் இதயம்
அழகிய காதலிக்கு ஆசை முத்தம்
காதலர் ராகுலுக்கு மோதிரம் அணிவிக்கும் சரண்யா
ஆசை முத்தம்