பாலியல் துன்புறுத்தல் தங்க முடியாமல் பிரபல சீரியல் நடிகை தற்கொலை..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
பிரபல சீரியல் நடிகை ஸ்ரவாணி என்பவர் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, தற்கொலை செய்து கொண்டதாக அவருடைய குடும்பத்தினர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனசு மம்தா என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் தெலுங்கு சீரியல் நடிகை ஸ்ரவாணி.
இவர் திடீர் என தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் இதுவரை சரியாக தெரியாததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் பிரபல செய்தி நிறுவனம் ஸ்ரவாணி தற்கொலை குறித்து, கூறுகையில்... தேவராஜ் ரெட்டி என்பவர் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததால், தற்கொலை முடிவை எடுத்ததாக அவருடைய பெற்றோர் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
ஹைதராபாத்தின் எசார் நகர் பி.எஸ்.யில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் இரண்டாவது மாடியில் வசித்து வந்த ஸ்ரவாணி, நேற்று இரவு 9-10 மணியளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஸ்ரவாணியின் குடும்பத்தினர் எப்சர்நகர் காவல் நிலையத்தில் தேவராஜ் ரெட்டி மீது புகார் கொடுத்துள்ளனர். அவருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கடந்த எட்டு வருடங்களாக மனசு மம்தா, மௌனராகம் ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான இவருடைய தற்கொலை ரசிகர்களை ஆதிர்ச்சியடைய செய்துள்ளது.