“செம்பருத்தி” சீரியல் நடிகர் கார்த்தி நீக்கம்... வெளியான உண்மை காரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி வெளியேறியதாக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்
இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி சமீபத்தில் திடீரென நீக்கப்பட்டார். சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்காக ஜனனி யூ-டியூப் நேரலையில் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல் ஹீரோவான கார்த்தியும் சீரியலில் இருந்து வெளியேறியதாகவும், விரைவில் டி.வி. நிர்வாகம் இதுகுறித்த அறிவிப்பை வெளியிடும் என்றும் செய்திகள் வெளியாகின.
தற்போது 800 எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த 9 நாட்களாக கார்த்தியின் கதாபாத்திரத்தை வெளியே காட்டாமல், துணை கதாபாத்திரங்களை மட்டுமே காண்பித்து வந்தது ரசிகர்களுக்கு சந்தேகத்தை கிளப்பியது.
இந்நிலையில் செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்தி வெளியேறியதாக தொலைக்காட்சி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதில், இந்த தொடரை வெற்றியடை வைத்த ரசிகர்களுக்கு நன்றி. தனது அர்பணிப்பு மற்றும் கடின உழைப்பால் செம்பருத்தி சீரியலை மாபெரும் வெற்றியடைந்த வைத்த நடிகர் கார்த்திக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் உடன் பணியாற்றி காலங்கள் மிகவும் மகிழ்ச்சியானது. ஆனால் எதிர்பாராத சில காரணங்களால் கார்த்தி செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். ஜீதமிழ் உடனான அவரது தொடர்பு மேலும் நீடிக்கும் அவரது பயணத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.
வெற்றிகரமான சீரியலில் இருந்து அதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படும் பிரபல நடிகர் ஒருவர் வெளியேறியிருப்பது செம்பருத்தி சீரியல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.