“செம்பருத்தி” சீரியல் ஹீரோ மாற்றமா?... எதிர்பாராத முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி...!
செம்பருத்தி சீரியல் நடிகர் கார்த்தி அந்த சீரியலில் இருந்து விலகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலேயே அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது செம்பருத்தி சீரியல் மட்டுமே. இல்லதரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் கூட இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
2017ம் ஆண்டு முதல் இன்று வரை அந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடித்து வருகின்றனர்.
இந்த தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஜனனி சமீபத்தில் திடீரென நீக்கப்பட்டார். சீரியலில் இருந்து நீக்கப்பட்டதற்காக ஜனனி யூ-டியூப் நேரலையில் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்னர் பேட்டி ஒன்றில் பேசிய ஜனனி செம்பருத்தி சீரியலில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் ஆதி தான் என்றும், அவருக்கு சீரியலை விட சினிமாவில் நடிக்கத்தான் மிகவும் விருப்பம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த சீரியல் ஹீரோ கார்த்திக் தானாகவே வெளியேறுவதாகவும், மாற்று ஹீரோ கமிட் செய்து விட்டு சேனல் முறைப்படி அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.