MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அப்போ புரியல... இப்போ புரியுது! தனுஷுக்கு புத்திமதி சொல்லத்தான் இப்படி ஒரு டுவிட் போட்டாரா செல்வராகவன்?

அப்போ புரியல... இப்போ புரியுது! தனுஷுக்கு புத்திமதி சொல்லத்தான் இப்படி ஒரு டுவிட் போட்டாரா செல்வராகவன்?

டுவிட்டின் மூலம் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து இயக்குனர் செல்வராகவன் முன்பே சூசகமாக பதிவிட்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2 Min read
Ganesh A | Asianet News
Published : Jan 19 2022, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் படங்களுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. குறிப்பாக செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் படங்களுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம். இவர்கள் இருவரும் இதுவரை காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் பணியாற்றி உள்ளனர்.

26

அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘நானே வருவேன்’ படத்திலும் தனுஷ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார். இதுதவிர இவர்கள் இருவரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் இணைந்து பணியாற்ற உள்ளனர். சினிமாவில் தனுஷை சிறந்த நடிகராக மெருகேற்றியதும் செல்வராகவன் தான். இதனால் செல்வராகவனை தனது குருவாகவும் போற்றி வருகிறார் தனுஷ்.

36

இதனிடையே நேற்று முன்தினம் இரவு நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தார். 18 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த இவர்கள் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து பிரிவதாக திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது கோலிவுட்டையே பரபரப்பாக்கியது. திரும்பியபக்கமெல்லாம் அவர்களது விவாகரத்து பேச்சு தான் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

46

இந்நிலையில், செல்வராகவன் கடந்த டிசம்பர் மாதம் போட்ட டுவிட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த டுவிட்டின் மூலம் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து இயக்குனர் செல்வராகவன் முன்பே சூசகமாக பதிவிட்டிருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

56

அதன்படி கடந்த டிசம்பர் 3-ந் தேதி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருந்த பதிவில், “தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

66

தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குமிடையே பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது தான், செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டிருக்கக் கூடும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அந்த டுவிட்டை குறிப்பிட்டு ‘அப்போ புரியல... இப்போ புரியுது' என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீப காலமாக இயக்குனர் செல்வராகவன் டுவிட்டரில் வாழ்க்கை தத்துவங்களை அதிகமாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
செல்வராகவன்
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved