இரண்டு நாயகியை தூக்கி அடித்துவிட்டு... மீண்டும் அழகு ராட்சஷி ரக்ஷிதாவை அழைத்து வந்த விஜய் டிவி!
இரண்டு நாயகியை தூக்கி அடித்துவிட்டு... மீண்டும் அழகு ராட்சஷி ரக்ஷிதாவை அழைத்து வந்த விஜய் டிவி!
'சரவணன் மீனாட்சி' சீரியல் மூலம் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிரபலமான ரக்ஷிதா மீண்டும், இரண்டாம் பாகமாக உருவான உள்ள, நாம் இருவர் நமக்கிருவார் தொடரில் நடிக்க உள்ளார்
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01edbjjps89v47t4xxdpxz9t86/naam-iruvar-namakku-iruvar-1-jpg_300x199xt.jpg)
ரக்ஷிதாவை வைத்து, இரண்டாம் பாகம் உருவாக உள்ளதால், ஏற்கனவே இந்த சீரியலில் நடித்து வந்த இரண்டு கதாநாயகிகளானரக்ஷா ஹால்ல, மற்றும் ராஷ்மி ஜெயராஜ் ஆகியோர் இந்த சீரியலில் இருந்து அதிரடியாக விலகியள்ளனர்.
ரக்ஷிதாவுக்கு விஜய் டிவியை பொறுத்தவரை இரண்டாவது பார்ட் சீரியல் தான் ராசி போல, காரணம் ஏற்கனவே சரவணன் மீனாட்சி சீரியலில் கூட, இரண்டாவது பாகத்தில் தான் இவர் நடித்தார்.
அதே நேரத்தில், சரவணன் மீனாட்சி சீரியலின் முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு இரண்டாவது பாகத்திற்கு இல்லை.
நாம் இருவர் நமக்கிருவார் சீரியலின் இரண்டாவது பாகத்தில் இணைத்துள்ள, அழகு ராட்சசி ரக்ஷிதாவுக்கு இந்த சீரியலின் இரண்டாவது பாகமாவது கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சரவணன் மீனாட்சி சீரியல் முடிவடைந்த பின்னர், ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியார் புறம் சீரியலில் தன்னுடைய கணவருக்கே ஜோடியாக நடித்து வந்தார்.
இதை தொடர்ந்து தற்போது மீண்டும், மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக... நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாக பாகத்தில் நடிக்க வருகிறார். இந்த சீரியலில் செந்தில் மாயன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஆனால் அரவிந்த் கதாபாத்திரம் உள்ளதா? இல்லையா? என்பதை சீரியல் ஒளிபரப்பாகும் போது தான் தெரியும்.