சித்ராவிற்கு பதில் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் நடிக்கிறேனா? முதல் முறையாக சரண்யா வெளியிட்ட உண்மை..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொடர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
குறிப்பாக, அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாககும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் இல்லத்தரசிகளின் ஃபேவரட். கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமையை இந்த சீரியலில் பார்க்கலாம்.
இந்த சீரியலில் நடிகர் ஸ்டாலின், மூத்த அண்ணனாக நடிக்கிறார். அண்ணி வேடத்தில் சுஜிதா நடித்து வருகிறார்.
மேலும் வி.ஜே.சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சீரியலின் ஹீரோயின்களில் ஒருவரான, 'சித்ரா' டிசம்பர் 9 ஆம் தேதி, பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கணவருடன் தங்கி இருந்தபோது, மன அழுத்தம் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது கொலையா? தற்கொலையா? என்கிற சந்தேகம் அனைவர் மனதிலும் இருந்த நிலையில், இவரது பிரேத பரிசோதனையில் தற்கொலை செய்து கொண்டே இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
எனினும் சித்ரா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு அவருக்கு என்ன பிரச்சனை இருந்தது என தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, சித்ரா நடித்து வந்த 'பாண்டியன் ஸ்டோர்' சீரியலில் , அவருக்கு பதிலாக நடிகை சரண்யா தான் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து முதல் முறையாக சரண்யா விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில், நான் நடிக்க உள்ளதாக பல தகவல்கள் உலா வருகிறது. அது உண்மை இல்லை. முல்லையின் கதாபாத்திரத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது.
தன்னுடைய நிறைவான நடிப்பினால் முல்லையாக அவர் மக்கள் மனதில் நிலைத்து விட்டார் அப்படியே, இருக்க வேண்டும்என விரும்புவதாக சரண்யா தெரிவித்துள்ளார். இதில் இருந்து இவர் முல்லையாக நடிக்க வில்லை என்பது தெரிகிறது.