அவளுக்கு ஒர்க் அவுட் ஆச்சி எனக்கு மட்டும் ஏன் ஓரங்கட்டுது... ஜாமின் மனு தள்ளுபடியால் சிறையில் புலம்பும் நடிகை!
பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் எம்டிஎம்ஏ, எல்எஸ்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக கன்னட சின்னத்திரையைச் சேர்ந்த நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 145 எம்டிஎம்ஏ, 180 எல்எஸ்டி போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஆண்டி ஜம்போ என்ற நபரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கி, முக்கிய புள்ளிகளுக்கு சொந்தமான வீடுகளுக்கு சென்று விற்பனை செய்து வந்ததாக தெரியவந்தது.
அவர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகைகள் ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை மருந்தை விற்பனை செய்ததற்காக, இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த மாதல் உடல் நல பிரச்சனை காரணமாக தனக்கு, ஜாமீன் வேண்டும் என சஞ்சனா கல்ராணி தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது... இவரது உடல்நலனை கருத்தில் கொண்டு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாரத்தில் இரு நாட்கள் காவல் நிலையத்தில் சஞ்சனா கல்ராணி ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும், மருத்துவ உதவிகளுக்கு கூட வெளிஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்பே செல்ல வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே இன்று மாலையோ அல்லது நாளை காலையோ சஞ்சனா ஜாமீனில் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சனாவிற்கு தற்போது ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை ராகினி திரிவேதிக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.
ஏற்கனவே, அவரும் உடல்நல பிரச்னையை காரணம் காட்டி, ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
தனிமை வாடுவதாக சிறையில் நடிகை ராகினி புலம்பி வருவதாக கூறப்பட்ட நிலையில், சஞ்சனா ஜாமீனில் வெளியே வருவது தெரிந்தால் அவரது ஆதங்கம் அதிகமாகும் என்பதில் எந்த சந்தேகமும்மில்லை.