ஹேய் நீ வெளியில வாடா இப்போ..! வயசுக்கு கூட மரியாதை கொடுக்காமல் சுரேஷை திட்டிய சனம்..!
பிக்பாஸ் வீட்டில் தற்போது நடந்து வரும் காடா... நாடா... டாஸ்கில் சனம் ஷெட்டி சுரேஷ் சக்ரவர்த்தியின் வயதுக்கு கூட மரியாதை தராமல், வாடா, போடா என பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுநாள் வரை, அண்ணா அண்ணா என அவரை சுற்றி வந்து ரொம்ப மரியாதையான பெண்ணாக இருந்த, சனம் ஷெட்டியின் சுய ரூபம் இந்த டாஸ்க் மூலம் வெளியே வர துவங்கியுள்ளதாகவே, இன்றைய எபிசோடு இருக்கும் என தெரிகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், சொர்கபுரியை சேர்ந்த ஆஜித் தன்னுடைய நாட்டை காப்பாற்ற காட்டுக்கு செல்கிறார்.
அவரை சூழ்ந்துகொண்டு அரக்கர்கள் அவர் மீது ஸ்ப்ரே அடித்து தொந்தரவு செய்கிறார்கள். இதை பார்த்த சுரேஷ் ஸ்ப்ரே அடிக்கிற பிசாசு என கோவத்தில் கத்துகிறார்.
ஆஜித்தை தொந்தரவு செய்வதை ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பார்க்க கூடாது என, கருப்பு நிற திரை ஒன்றும் கட்டப்படுகிறது. பின்னர் சுரேஷ் எதையோ வைத்து சனத்தில் கையில் தாக்கியபோது அது அவரது நெற்றியில் படுகிறது.
இதனால் கோவமானம் சனம், கொஞ்சம் இருந்தால் தன்னுடைய கண்கள் போய் இருக்கும் என கத்துகிறார்.
சனத்திற்கு ஆதரவாக பாலாஜியும், சுரேஷை பார்த்து அறிவே இல்லையா என கேட்கிறார்.
மேலும் சனம் சுரேஷ் சக்ரவர்த்தியின் வயதை கூட கருத்தில் கொள்ளாமல் ஹேய் நீ வெளில வாடா இப்போ என கூறுகிறார். பின்னர் சுரேஷ் நீங்கள் செய்யலாம் நாங்கள் செய்ய கூடாதா? என கேட்கிறார்.
அப்போது சனம் எனக்கும் மனசு இருக்கு என சினிமா டயலொக் போல் கூற... சுரேஷ் சக்கரவர்த்தி சிரிக்கிறார். என்னதான் இன்னைக்கு நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.