பட்டினியா கூட கிடப்பேன் அது இல்லாம இருக்க முடியாது..! சமந்தாவின் ஷாக்கிங் பதில்!
பட்டினியா கூட கிடப்பேன் அது இல்லாம இருக்க முடியாது..! சமந்தாவின் ஷாக்கிங் பதில்!
நடிகை சமந்தா அணைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவர். இவரின் பவர் ஃபுல் நடிப்பும், திறமையும் தான் இவருக்கு பல ரசிகர்களை உருவாக்கி தந்துள்ளது என்றால் அதனை யாராலும் மறுக்க முடியாது.
சமந்தா ஒரு மாடர்ன் பெண்ணாக இருந்தாலும், அனைவரும் பொறாமை படும் படும், தன்னுடைய மாமியார், மாமனார், உறவுகள் என அனுசரித்து குடும்பத்தை நடத்தி வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் அதிக ஆர்வம் காட்டும் இவர், அடிக்கடி, சமையல் செய்வது, தன்னுடைய நாயுடன் கொஞ்சுவது மற்றும் விதவிதமான புகைப்படங்களை வெளியிடவும் மறப்பது இல்லை.
இந்நிலையில் இவர், JWF மேகஸின் எழுப்பிய சில சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில் கொடுத்திருந்தார்.
குறிப்பாக, உங்களுக்கு வாழ்க்கையில் உணவு முக்கியமா அல்லது செக்ஸ் உறவு முக்கியமா என கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவேன் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என தைரியமாக கூறி அசரவைத்தார். ஆனால் இது இப்போது இல்லை திருமணம் ஆன புதிதில்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாக திருமணம் செய்து கொண்ட இவர், திருமணம் ஆகி 3 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய இவர், குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை கணவர் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
குழந்தை பெற்றுக்கொண்ட பின், குழந்தை தான் என்னுடைய உலகமாக இருக்கும் என்பதையும் சமந்தா தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா லாக் டவுன் நாட்களை, ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில், கணவருடன் சேர்ந்து சமையல், கார்டானிங், பொழுது போக்கு என என்ஜாய் செய்து வருகிறார்.