கல்யாணத்திற்கு பிறகும் மார்க்கெட் சரியாத சமந்தா... டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவே இத்தனை கோடி சம்பளமா?
தற்போது தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்துள்ளார் நடிகை சமந்தா. தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள 'சாம் ஜாம்' என்ற ஒன் டு ஒன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்க உள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகாத சமந்தா, விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.
லாக்டவுன் நேரத்தில் யோகா, மாடித்தோட்டம் என பிசியாக வலம் வந்த சமந்தா. தற்போது சின்னத்திரையில் புகுந்து விளையாடி வருகிறார்.
மாமனார் நாகார்ஜுனா தொகுத்து வழங்கிய தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்கள் தொகுத்து வழங்கினார். அதற்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ் கிடைத்தது. நீங்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குங்கள் என பிக்பாஸ் ரசிகர்கள் கெஞ்சி கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது.
தற்போது தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்துள்ளார் நடிகை சமந்தா. தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள 'சாம் ஜாம்' என்ற ஒன் டு ஒன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை சமந்தா தொகுத்து வழங்க உள்ளார்.
இதன் முதல் பங்கேற்பாளரே தெலுங்கின் இளம் ஹீரோவான விஜய் தேவரகொண்டா தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்நிகழ்ச்சியில் வெறும் 10 எபிசோட்களை மட்டுமே தொகுத்து வழங்க உள்ள சமந்தா இதற்காக ரூ. 1.5 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.