MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மகளின் திருமண முறிவு..! அதிர்ச்சியில் இருந்து மீளாத சமந்தாவின் தந்தை என்ன சொன்னார் தெரியுமா..?

மகளின் திருமண முறிவு..! அதிர்ச்சியில் இருந்து மீளாத சமந்தாவின் தந்தை என்ன சொன்னார் தெரியுமா..?

சமந்தா (samantha)  - நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து பெற உள்ளதாக கூறப்பட்ட தகவல் வந்தந்தியாக தான் இருக்க வேண்டும் என, ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், இதனை நிஜமாக்குவது போல், இருவருமே தங்களுடைய பிரிவு குறித்து உறுதி படுத்தினர். இந்நிலையில் இவர்களது பிரிவு குறித்து சமந்தாவின் தந்தை (joseph prabhu) மனம் திறந்துள்ளார். 

2 Min read
manimegalai a
Published : Oct 07 2021, 07:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கடந்த 2010 ஆம் ஆண்டு Ye Maaya Chesave என்கிற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய இவர்கள் பின்னர் காதலர்களாகவும் மாறினர். இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கிய பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன்... கோவாவில் மிக பிரமாண்டமாக, கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு இவர்களுடைய திருமணம் 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது.

 

27

திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தாலும் ஒரு பொறுப்பான மருமகளாகவும், அனைவரும் பொறாமை கொள்ளுபடி நடந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தில் என்ன, விசேஷம் நடந்தாலும், படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்வது சமந்தா சமத்து பொண்ணு.

 

37

ஆனால், சமீபத்தில் தன்னுடைய மாமனார் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி, அமீர் கானுக்கு விருந்து கொடுக்கும் பார்ட்டி என எதிலும் சமந்தா கலந்து கொள்ளாமல் இருந்தது கணவன் - மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை உறுதி செய்யும் விதமாகவே அமைந்தது.

 

47

இந்நிலையில் கடந்த சில தினம், தங்களுடைய விவாகரத்து குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா - நாக சைதன்யா இருவருமே, தங்களுடைய பிரிவை உறுதி செய்தனர்.

 

57

இவர்களுடைய பிரிவை தொடர்ந்து, சமந்தாவின் மாமனாரும், நாகசைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா கனத்த இதயத்துடன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது வரை இவர்களது திருமண முறிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை.

 

67

இவருடைய விவாகரத்து குறித்து பல்வேறு யுகங்களும், வதந்திகளும் பரவி வரும் நிலையில், தற்போது சமந்தாவின் தந்தை முதல் முறையாக தன்னுடைய மகள் விவாகரத்து குறித்து பேசியுள்ளார்.

 

77

சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு கூறுகையில், இது சற்றும் எதிர்பார்க்காத ஒன்று, என்றும் இது குறித்து கேள்விப்பட்டதும் எனது மனம் செயலற்று போய்விட்டது. எல்லா பிரச்சனைகளும் சில நாட்களில் சரியாகி விடும் என முதலில் நினைத்தேன். ஆனால் என் மகள் அவரது பக்கமுள்ள விளக்கங்களைக் கூறி என்னை சமாதானம்செய்தார். என் மகள் நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என சமந்தாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved