71 வயது தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருந்த ரியா சக்ரபோர்த்தி! காதலியால் தற்கொலை செய்தாரா சுஷாந்த்?
நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டு, ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் இன்னும் அவருடைய நினைவுகள் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கவில்லை. மேலும் இவருடைய மன உளைச்சலுக்கு வாரிசு நடிகர், நடிகைகள் தான் காரணம் என்று கூறப்படுவதால், சமூக வலைத்தளத்தில் சுஷாந்தின் ரசிகர்கள் அவர்களை வச்சி செய்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் பல்வேறு போராட்டங்களுக்கு பின் நுழைந்து, வெற்றி வாகை சூடியும் சூழ்ச்சியால் இவர் உயிர் பறிக்கபப்பட்டதற்கு நியாயம் கேட்டு போராடி வருகிறார்கள் இவருடைய ரசிகர்கள்.
சுஷாந்த் தற்கொலை விவகாரம் தொடர்பாக, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் சுமார் 9 பது மணி நேரம் தொடர் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் பல்வேறு தகவல்களை கூறினார் ரியா. அதாவது நவம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் சில காரணங்களால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் தெரிவித்தார்.
இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வர காரணம், பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும், இயக்குனருமான மகேஷ் பட் என கூறப்படுகிறது.
ரியா சக்ரபோர்த்தி, மகேஷ் பட்டுடன் நெருங்கி பழகி வந்தது சுஷாந்த்துக்கு பிடிக்காததால் தான் இவர்களுக்குள் பிரச்சனை உருவாகி பிரிந்துள்ளார்கள் என்கிற தகவல் தற்போது பாலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக ரியாவுடன் மகேஷ் பட் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, பட வாய்ப்புகள் ஒவ்வொன்றாக பாலிவுட் முன்னணி பிரபலங்களின் சூழ்ச்சியால் இழந்து வந்த மன உளைச்சலில் இருந்த சுஷாந்த்துக்கு, தன்னுடைய காதலி இப்படி நடந்து கொள்வதும் அதிக மன அழுத்தத்தை கொடுத்து தற்கொலை வர கொண்டு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சுஷாந்தின் மன அழுத்தத்திற்கு சிகிச்சை கொடுத்த மருத்துவரும், தன்னை நடிகை அங்கிதா போல் யாருமே உண்மையாக காதலிக்க வில்லை என பல முறை சுஷாந்த் சிங் கூறி வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷாந்த் தற்கொலை விவகாரத்தில், ஓவ்வொரு நாளும் வெளியாகி வரும் தகவல்கள், இந்த வழக்கை சூடுபிடிக்க வைத்துள்ளது.