ஷேம் ஷேம்... பப்பி ஷேம்... ஆடை அணியாத புகைப்படத்தை பகிர்ந்து செம ட்விஸ்ட் வைத்த ரெஜினா..!
நடிகை ரெஜினா தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, வெளியிட்ட பப்பி ஷேம் புகைப்படத்தில் செம்ம ட்விட் வைத்துள்ளார்.
தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. ஆனால் இவரை ரசிகர்களிடம் அடையாளப்படுத்தியது என்றால், அது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் எனலாம்.
இந்தப் படங்களைத் தொடர்ந்து சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி, மாநகரம், சிலுக்குவார் பட்டி சிங்கம், ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழில் மட்டும் அல்லது, தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அதே போல் பாலிவுட் படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது இவரது நடிப்பில், தமிழில் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா, உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
இந்நிலையில் ரெஜினா டிசம்பர் 13 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார்.
தமிழ், தெலுங்கு என இருமொழியிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளதால், அவர்கள் தங்களுடைய வாழ்த்தை, சமூக வலைத்தளம் மூலம் மழையாக பொழிந்தனர்.
இந்நிலையில் தனது புதிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரெஜினா கசாண்ட்ரா, “உங்களது வாழ்த்துகளுக்கும், ஆசிர்வாதங்களுக்கும் நன்றி. இவை அனைத்தும் இந்த உலகம் எனக்கானது என்பதைக் காட்டுகிறது என்று சந்தோஷத்தை பகிர்ந்திருந்தார்.குறிப்பாக புகைப்படத்தின் கீழே அடுத்த பக்கத்தில் எனது ஆடையில்லா புகைப்படம் இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் செம்ம ஷாக் ஆகிவிட்டார்கள்.
ரெஜினா பொய் சொல்லவில்லை என்றாலும், அவரது குழந்தை பருவ புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
ஆடையில்லாமல் தவழும் குழந்தையாக ரெஜினா இருக்கும் இந்த அழகிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகள் குவிந்து வருகிறது.