பளீச் சேலையில்... பூ கிரீடம் வைத்து புன்னகையால் சுண்டி இழுக்கும் ராஷ்மிகா! பூரித்து போன இளம் நெஞ்சங்கள்..!
நடிகை ரஷ்மிகா மந்தனா, அழகிய காட்டன் சேலை கட்டி... பூவால் ஆன கிரீடம் வைத்து, புன்னகையாக ரசிகர்களை வசப்படுத்துகிறார். இவரது இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Rashmika
குறுகிய நாட்களிலேயே தன்னுடைய அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா. கீதா கோவிந்தம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இல்லாது தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. இவர் நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'சுல்தான்' படத்தின் மூலம் தமிழிலும் நாகையாக அறிமுகமானார்.
ஏற்கனவே, கன்னடம், தெலுங்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில், பாலிவுட் திரையுலகிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மிகக்குறுகிய காலத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு, மற்றும் அழகாலும் ரசிகர்களை கவர்ந்து, வளர்ந்து கொண்டே செல்லும் ராஷ்மிக்கா எப்போதுமே சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.
அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உரையாடுவது, மற்றும்... அவ்வப்போது கண்ணை கவரும் உடையில் பளீச் போஸ் கொடுத்து மனதை வசீகரித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது, பூரிக்க வைக்கும் அழகில்... பூவால் ஆன கிரீடம் வைத்து, புன்னகையால் ரசிகர்களை உசுப்பேற்றும் புகைப்படம் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.