ரகுல் ப்ரீத் சிங் மனசு யாருக்கு வரும்..! தடாலடி முடிவால் சிக்கிய மற்ற நடிகைகள்..?
ரகுல் ப்ரீத் சிங் மனசு யாருக்கு வரும்..! தடாலடி முடிவால் சிக்கிய மற்ற நடிகைகள்..?
கொரோனா பிரச்சனை எப்போது முடிவிற்கு வரும் என்பது விடை தெரியாத கேள்வியாய் அனைவர் மனதிலும் உள்ள நிலையில், இந்த ஊரடங்கால் சினிமா துறையை சேர்ந்த பலர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பைனான்ஸ் வாங்கி படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் பலர், உரிய தேதியில் படத்தை வெளியிடாததால், வட்டி குட்டி போட்டு அவர்களுக்கு பெரிய சுமையாக மாறியுள்ளது.
இந்த நஷ்டத்தை ஈடுகட்ட, முடிந்தவரை தயாரிப்பாளர்களுக்கு நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைத்து கொண்டு உதவ வேண்டும் என்று, தயாரிப்பாளர்கள் தங்கள் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளருக்கு உதவும் வகையில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், மகத், நடிகை ஆர்த்தி, இயக்குனர் ஹரி உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் தங்களது சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்கள்
இந்த நிலையில் தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ரகுல் ப்ரீத்திசிங் தனது சம்பளத்தில் 50% குறைத்து கொள்வதாக அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி உள்ள இவர், இந்த படத்தை அடுத்து நடித்த, என்.ஜி.கே, தேவ் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
தற்போது ஷங்கரின் ‘இந்தியன் 2’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் ரகுல் ப்ரீத்திசிங் தனது சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார்.
இதுவரை அவர் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கி வந்ததாகவும், தற்போது அவர் ரூ.75 லட்சத்திற்கு நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரகுல் ப்ரீத்திசிங் போலவே முன்னணி நட்சத்திரங்கள் தாங்களாகவே முன்வந்து சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள், இதனால் முன்னணி நடிகைகளுக்கு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.