சித்ராவுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய விவகாரம்! முதல் முறையாக வாய் திறந்த ரக்ஷன்!
First Published Dec 19, 2020, 4:12 PM IST
சித்ராவின் தற்கொலையில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், திடீர் திருப்பமாக, சித்ராவுடன் டேட்டிங் சென்றபோது எடுத்துக்கொண்ட வீடியோவை காட்டி, இளம் நடிகரும் பிரபல தொகுப்பாளருமான ரக்ஷன் மிரட்டி வந்ததாக சித்ராவின் தோழி தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில், முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானவர் விஜே சித்ரா. இவர் கடந்த 9ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை காமராஜ் போலீசில் புகார் அளித்தார். இதனிடையே பிரேத பரிசோதனை அறிக்கையிலும் சித்ராவின் மரணம் தற்கொலை என்பது உறுதியானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?