பெங்களூரு பறந்த ரஜினி... அண்ணன் காலில் விழுந்து ஆசி பெற்றார்... வைரல் போட்டோஸ்...!
நேற்று திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு பறந்து சென்றார். அங்கு தனது அண்ணன் சத்யராராயணாவின் இல்லத்தில் தங்கியுள்ள ரஜினிகாந்த், அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த டிசம்பர் 31ம் தேதி தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ளார். ஜனவரியில் கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலிலும் களமிறங்கும் தீவிர முயற்சிகளை ரஜினிகாந்த் மேற்கொண்டு வருகிறார்.
ரஜினியின் அரசியல் அறிவிப்பால் குஷியான அவருடைய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில் வரும் டிசம்பர் 12ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வர உள்ளது. இதையடுத்து தலைவரின் பிறந்தநாளை வேறு எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் கொண்டாட அவருடைய ரசிகர்கள் திட்டமிட்டு வந்தனர்.
ஆனால் நேற்று திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெங்களூரு பறந்து சென்றார். அங்கு தனது அண்ணன் சத்யராராயணாவின் இல்லத்தில் தங்கியுள்ள ரஜினிகாந்த், அவரிடம் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடும் முன் தன்னை வந்து சந்தித்து ஆசி பெற்ற ரஜினிக்கு அண்ணன் சத்யநாராயணா பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
அரசியலுக்கு வர வருகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த் தனது நிலைப்பாடு குறித்து அண்ணன் சத்யநாராயணாவை நேரில் சந்தித்து விவாதித்துள்ளார்.
தலைவரின் பிறந்தநாள் என்றாலே அவரை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக போயஸ் கார்டன் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் படையெடுப்பார்கள்.
தற்போது கொரோனா காலம் என்பதால் அதை தவிர்ப்பதற்காக பெங்களூரு சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கேயே தனது பிறந்த நாளையும் கொண்டாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.