'கெட்டவார்த்தை மட்டும் பேசக்கூடாது'...இயக்குனரிடம் கண்டிஷன் போட்ட ரஜினி
இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தில் நடித்த ரஜினிகாந்த இயக்குனரிடம் பக்காவாக கண்டிஷன் போட்ட விஷயத்தை ராதாரவி கூறியுள்ளார்.
Annaatthe
கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் அண்ணாத்தே. சிவா இயக்கத்தில் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டி இமான் இசையமைத்துள்ள இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.
annaatthe
கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் பெண் ரசிகர்கள் மத்தியில் வெற்றி படமாக இருந்த இந்த படம் தி கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்தது.
Annaatthe
பாக்ஸ் ஆபிஸில் சுமார் 200 கோடி ரூபாய் மேல் வசூலித்த இந்தப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 90ஸ் நாயகிகள் முதல் 2k நாயகிகள் வரை நடித்திருந்தனர்.
rajini 169
இதை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். பீஸ்ட் படம் ரிலீசாகும் முன்னரே நெல்சன் ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.
rajini 169
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த அப்டேட் ப்ரோமோ வடிவில் சமீபத்தில் வெளியாகியது.
rajinikanth
இந்நிலையில் ரஜினி குறித்து சமீபத்தில் ராதாரவி மேடையில் பேசியிருந்தது வைரலாகி வருகிறது. அதாவது இருவரும் இணைந்து நடித்திருந்த லிங்கா படத்தின் சுவாரஸ்யத்தை பகிர்ந்துள்ளார் ராதாரவி.
lingaa
லிங்கா படத்தை கே.எஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் ராதாரவி, சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா ஷெட்டி என பலர் நடித்து இருந்தனர்.
lingaa
லிங்கா கதைப்படி கோவிலில் நடக்கும் சம்பவம் தொடர்பாக சிவன் கோவிலில் சூட்டிங் நடைபெறுவதற்கு முன்னதாக கோவிலுக்குள் மட்டும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் ரஜினிகாந்த் சத்தியம் வாங்கி கொண்டதாக ராதாரவி மேடையில் பேசியுள்ளார்.